குமரன்

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளை தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசாங்கத்தின் போது உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனினும், இந்த உடன்படிக்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் ...

Read More »

அரசியல் களத்தில் இணையும் ரஜினி – கமல்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படுவார்களா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியல் களம் பரபரப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க இரண்டாக பிளந்து இரட்டை இலை சின்னமும் முடங்கிப்போய் கிடக்கிறது. கருணாநிதி வயது மூப்பினால் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டி தமிழக அரசியலை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லும் தலைவராக யார் வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவர் மனதிலும் கேள்வியாக நிற்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த வெற்றிடத்தை ...

Read More »

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தகவல்களின் படி புதிய ஐபோன் SE அந்நிறுவனத்தின் விலை குறைந்த சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் SE அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ஐபோன் SE ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த விலை சாதனமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஐபோன் SE 2017 விலை €399 அதாவது இந்திய மதிப்பில் ரூ.29,517 வரை நிர்ணயம் செய்யப்படும் ...

Read More »

இன்று மைத்திரியை சந்திக்கும் ஜுலி பிஷோப்!

இரு நாட் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா  வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் அவர் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் நேற்று சிறிலங்கா வந்தார். நேற்று சிறிலங்கா வந்த அவர் நேற்று மாலை சிறிலங்கா வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்துள்ளார். இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் இணைந்த ...

Read More »

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு செக் வைத்தது அவுஸ்ரேலியா!

உலகின் முன்னணி சாட் அப்ளிகேஷனான வாட்ஸ்அப்பில், பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே மற்றொருவரை சென்றடையும். பின்னர் அந்த செய்தியானது, ‘டிகிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே பயனாளரின் மொபைல் போனில் படிக்கமுடியும். இதனால், வேறு எவராலும் அந்த செய்தியை இடைமறித்துப் படிக்கமுடியாது. பயனாளர்களைப் பொறுத்தவரை, இது பாதுகாப்பான விஷயம்தான் என்றாலும், சமூகவிரோதிகள் இதைப் பயன்படுத்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. இதனால், பல நாடுகளிலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாட்ஸ்அப் ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. ராஜினாமா

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. லாரிஸ்சா வாட்டர்ஸ் தனது பதவி இழந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்ரேலியாவில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) ஆவார். இந்தப் பெண் எம்.பி., நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவர். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவாறு அவர் பாராளுமன்றத்தில் பேசிய படக்காட்சி, உலகமெங்கும் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் எம்.பி., லாரிஸ்சா வாட்டர்ஸ், பதவி விலகி உள்ளார். அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதே பதவி விலகலுக்கு காரணம் ...

Read More »

`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்

விவேகம்’ படத்தின் மூன்றாவது பாடலாக நாளை வெளியாக இருக்கும் “காதலாட” பாடலில் முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்’ தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் டீசர் சாதனைகளையும் முறியடித்துள்ளது. அனிருத் இசையில் ...

Read More »

அவுஸ்ரேலியாவுடன் நாளை பலப்பரீட்சை!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி விழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ...

Read More »

ஸ்மார்ட்போன் பிராசஸர்!

ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்க மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக பிராசஸர்கள் இருக்கிறது. எனினும் பிராசஸர்கள் என்றால் என்ன, இது நம் ஸ்மார்ட்போன்களில் என்ன செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனங்களின் மிக முக்கிய பாகமாக அதன் பிராசஸர் இருக்கிறது. நாம் கொடுக்கும் விலைக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களில் வெவ்வேறு விதமான பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன. எக்சைனோஸ், ஆக்டா கோர், குவாட் கோர் என இத்தனை பிராசஸர்கள் நம் ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது? பிராசஸர் என்றால் என்ன? உங்களின் ஸ்மார்ட்போன் என்ன செய்ய ...

Read More »

புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்கா ஏற்குமா?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய சிலரை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ்ரு தீவு முகாம்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த முகாம்களில் இருக்கின்றவர்களை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடந்த வாரங்களில் நேர்முகம் கண்டதாக தெரியவருகிறது. ஆனால் அவர்கள் திடீரென அமெரிக்கா திரும்பிவிட்டனர் என்று வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. அமெரிக்கா ஆண்டுதோறும் ஏற்கும் சுமார் ஐம்பதாயிரம் அகதிகளின் எண்ணிக்கைப்படி ஏற்கனவே இந்த எண்ணிக்கை கொண்ட அகதிகளை இந்த ஆண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால் புதிய அகதிகளை இந்த ...

Read More »