இன்று மைத்திரியை சந்திக்கும் ஜுலி பிஷோப்!

இரு நாட் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா  வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் அவர் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் நேற்று சிறிலங்கா வந்தார்.

நேற்று சிறிலங்கா வந்த அவர் நேற்று மாலை சிறிலங்கா வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் இணைந்த ஊடக சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது.