குமரன்

அலோசியஸிடம் பணம் பெற்றவர்களின் பட்டியல் கையளிப்பு!

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் சபாநாயக ர் கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று கையளித்துள்ளார். அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வௌியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

காணாமல்போனவர்களின் விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில்!

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசியமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாத்தறை முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தாக தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் எதிர்வரும் 13 ம் திகதி திருகோணமலையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களை ஜனாதிபதி ...

Read More »

“சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல தேடாத!’-மதன் கார்க்கி

“பெரியார் இப்போ இருந்திருந்தா அவருடைய எண்ணங்கள் எப்படி வெளிப்பட்டிருக்கும் அப்படீங்கிறதை சுவாரஸ்யமான வழியில சொல்லணும்னு நினைச்சோம். ரமேஷ் தமிழ்மணிதான் இதை ஆரம்பிச்சு வெச்சார். இந்த ஆல்பத்துக்கு மியூசிக் டைரக்டரும் அவர்தான். அவர் என்கிட்ட, `நிறைய மெலோடி பாடல்கள் பண்ணியிருக்கீங்க. ஃபாஸ்ட் பீட்ல ஒரு பாடல் பண்ணலாமா?’னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து’ ஆல்பம்!” – உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. “உங்களுக்கும் ரமேஷ் தமிழ்மணிக்குமான நட்பு எங்கேயிருந்து தொடங்கியது?”  “நானும் அவரும் சேர்ந்து ஷாரூக் கானை மெயின் கேரக்டரா வெச்சு, ஒரு கிராஃபிக் நாவலை வொர்க் ...

Read More »

டிரம்ப் – கிம் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம்திகதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார். வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் ...

Read More »

நீங்கள் நலமாக இருப்பதற்கான 10 அறிகுறிகள்!

உங்களைச் சுற்றி இன்னமும் அழகோடு இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்துப் பாருங்கள்… மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் ஆனி ஃப்ராங்க். ஆனி ஃப்ராங்க், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனில் வாழ்ந்த யூதச் சிறுமி. இவரும் ஹிட்லரின் வதைமுகாமில் இறந்துபோனவர்களில் ஒருவர்தான். நாஜிப் படைகளுக்கு பயந்து, இரண்டாண்டுகள் ஓர் இடத்தில் ஒளிந்திருந்தபோது ஆனி எழுதிய `தி டயரி ஆஃப் எ யங் கேர்ள்’ நாட்குறிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. ஹிட்லரின் படையால் யூதர்கள் அனுபவித்த கொடுமைகளை வலி மிகுந்த வார்த்தைகளோடு விவரிக்கிறது அவருடைய நாட்குறிப்பு. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீசுவரர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது கோடீசுவரர் அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ...

Read More »

சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு ஊடகச் சந்திப்புகளுக்கு தடை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. “இராணுவ அதிகாரி ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும், இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்” அந்த வகையில், சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள இராணுவத் ...

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் காணி வலி வடக்கில் விடுவிப்பு!

வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் படையினரின் ஆக்கிரப்பில் இருத்து மேலும் 34 ஏக்கர் நிலம் நாளைய தினம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படவுள்ளது. வலி. வடக்கில் காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்புக்களை ஆக்கிரமித்து பெரிய இராணுவ முகாம்கள் தற்போதும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் இராணுவ முகாமில் இருந்து 34 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் பலாலி இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதி நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த 34 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் பட்சத்தில் ...

Read More »

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ...

Read More »

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்!

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதையும் தமிழ்த்தேசிய நோக்கு ...

Read More »