குமரன்

சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு!

கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். நஞ்சருந்தி உயிரைத் துறப்பது ...

Read More »

உலகின் முதல் குறுந்தகவல் சேவை விரைவில் நிறுத்தம்!

ஓத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஒத் இன்க் நிறுவனம் யாஹூ மெசன்ஜர் சேவை ஜூலை 17-ம் திகதி முதல் இயங்காது என அறிவித்துள்ளது. யாஹூ மெசன்ஜர் உலகின் முதல் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாகும். யாஹூ மெயில் மற்றும் இதர சேவைகளை பயன்படுத்த யாஹூ ஐடி அப்படியே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவையை நிறுத்துவதை அந்நிறுவனம் முடிவு செய்யவில்லை என்றாலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசன்ஜர் மற்றும் இதர சாட் செயலிகளின் ...

Read More »

கோத்தபாய வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாவதற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது எனக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியில் கோத்தாபாய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தை கணக்கிலெடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்துமுரண்பாடுகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் இருவர் மத்தியில் ...

Read More »

மன்னாரில் “மக்கள் காதர்” என அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் காலமானார்!

நீண்ட நாட்களாக சுகவீனம் அடைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும் பிரபல எழுத்தாளரும் கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமானார். மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவர். ஜனாசா நல்லடக்கம் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எழுத்தியல் நாயகன், மக்கள் காதர் இன மத சமூக வேறுபாடுகளைக் களைந்து ஊடகத்துறையிலும், ...

Read More »

வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் சென்றார்!

அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று சிங்கப்பூர் சென்றடைந்தார். வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் சில கருத்து வேறுபாடி ஏற்பட்டது, இதனால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி வருகிற 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் ...

Read More »

மிதிவெடிகளை அகற்றுவதற்கு அவுஸ்திரேலியஅரசு 85 கோடி ரூபாய் நிதியுதவி!

இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 700,000 அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 84.5 கோடி ரூபாய்) வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிதியினால் வடமாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு தேவையான பொருளாதார உதவியை வழங்குவதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு அதிகமாக ஆதரவை வழங்கிவரும் நாடாக அவுஸ்திரேலியா காணப்படுவதுடன், 2009ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.

Read More »

மீண்டும் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராக சி.வி.விக்கினேஸ்வரன்!

தமிழ் மக்கள் பேரவை அடுத்த மாகாண சபை தேர்தலில் தனது ஆதரவு வேட்பாளரை களமிறக்கலாமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பூடகமாக கருத்து தெரிவித்துள்ளார். பேரவை சார்பில் ஒருவரையும் வேட்பானராக நியமிக்க மாட்டோம். ஆனால் பேரவையின் அனுசரணையில் யாராவது முதலமைச்சர் வேட்பாளராக வரக்கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான முன்னே ற்றம் இடம்பெறுவதாக கூறப்படுகின்றதேயென்ற கேள்விக்கு பதிலளித்து அவர் முன்னேற்றம் ஒன்று நடைபெற் றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அது கட்சி ரீதியானது என நான் பார்க்கவில்லையென தெரிவித்திருந்தார். ...

Read More »

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும்  சிறிலங்காவினால்  முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை சிறிலங்கா  முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையின் இணை ஆணைக்குழு என்பவற்றின் கீழ் ...

Read More »

சரணடைய தயார்– வெள்ளைக்கொடியை உயர்த்திச் செல்லுங்கள்- துப்பாக்கிகள் வெடித்தன!

வெள்ளைக் கொடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையில் இருந்த ஒரே சாட்சியாளர் எனக் கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் உறுப்பினரான ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு, நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சந்திரகாந்தன் கடந்த 5 ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் தனக்கு பாதுகாப்பு இல்லை என அரசாங்கத்தின் பிரதானிகள் சிலரிடம் எடுத்துக் கூறிய போதிலும் அரசாங்கத்தின் பிரதானிகள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என ரொஹான் சந்திரகாந்தன் சந்திராநேரு கூறியுள்ளார். மேலும் தனது பாதுகாப்புக்காக தன்னிடம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற குடும்ப தகராறின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி Carlingford பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சிறுவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டுள்ளார். இருப்பினும் எவ்வித பயனும் இன்றி படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது ...

Read More »