அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்தில் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற குடும்ப தகராறின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னி Carlingford பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சிறுவன் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்படுவதை அவனது பாட்டி தடுக்க முற்பட்டுள்ளார்.

இருப்பினும் எவ்வித பயனும் இன்றி படுகாயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துயர சம்பவம் நடைபெற்றபோது சிறுவனின் தாயார் இல்லை என்று கூறப்படுகிறது.