குமரன்

விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம்!

நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான விசா நடைமுறை அவுஸ்திரேலியாவில் மேலும் கடினமாக்கப்படலாம் என குடியுரிமை தொடர்பான அமைச்சர் Alan Tudge மறைமுகமாக கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் வர முன்னரே பலருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நிரந்தர உரிமையினை ஒருவருக்க வழங்குவதற்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவின் விழுமியங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னரே அவர் தேர்வுகளை எதிர்க்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரைக்கும் தற்போது உள்ள நடைமுறையின் படி சில வருடங்கள் வாழ்ந்த பின் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் வகையில் ...

Read More »

நாயன்மார் கட்டுப் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. யுத்த காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இராணுவம் நிலை கொண்டிருந்த குறித்த இடத்தில் இருந்தே, நேற்று (20) மனித எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இருப்பினும், இனங்காணப்பட்ட மனித எச்சங்களை பொருட்படுத்திக் கொள்ளாமல் அங்கு மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத்தின் நிலக் கீழ் தாங்கி அமைக்கும் நடவடிக்கைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வியங்காடு – நாயன்மார் கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான ...

Read More »

போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும்!

எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் கடத்தவர்களுக்கு எதிராக மரணத் தண்டனை விதிக்கப்பட்டே தீரும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சீனா – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் பொலன்னறுவையில் இன்று (21) காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.

Read More »

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்யாவிட்டால் மத்திய கிழக்கு நாடுகள் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை தடுப்போம் என்று கூறிய ஈரான் அதிபருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது. ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்கா நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ...

Read More »

ஐயன் மேன் ஜெட் சூட்!

ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதை போன்ற ஐயன் மேன் சூட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறது. திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக பிரபலமாக இருக்கும் ஐயன் மேன் கதாபாத்திரத்தை ...

Read More »

மனுஸ்-நவுறு தடுப்பு முகாம்களின் 5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு போராட்டம்!

சட்டவிரோதமாக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு லேபர் கட்சி முடிவு செய்ததன் 5வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் அகதிகள் நல அமைப்புக்கள் நாடளாவிய ரீதியில் அமைதிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு மனுஸ் மற்றும் நவுறு தடுப்பில் முகாமில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டனர். அங்கு தடுத்து வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இதுவரை 12 உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 1600 பேர் குறித்த தீவுகளில் தங்க ...

Read More »

48 ஆண்டுகளாக தொடரும் பயங்கரவாதத் தடைச்சட்டம்!

இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் ...

Read More »

திலீபன் உட்பட 18 பேரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்!

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்னாசிய விவகார ஆய்வாளரும், கல்வியாளருமான பேராசிரியர் டேமியன் கிங்ஸ்பெரி இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இலங்கை தமிழரான திலீபன் ஞானேஸ்வரன், அவரின் மனைவி மற்றும் குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு ...

Read More »

பறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்!

தென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த காணொளி வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது. அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்து அலறினார்கள். இருந்தும் பதட்டப்படாத விஞ்ஞானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி தரை ...

Read More »

வடக்கு மாகாண முதல்வரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தவராசா அழைப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் ...

Read More »