குமரன்

தலாய்லாமாவை துப்பாக்கியுடன் நெருங்கிய பாதுகாவலர்!

மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் யாரும் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை கூட எடுத்துச்செல்ல அனுமதியில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள மைன்புரி மாவட்டம் ஜசராபூர் என்ற பகுதியில் தலாய்லாமா மேடையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். அப்போது ஒரு பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் மேடையில் ...

Read More »

ஜெயலலிதா: மாநில உரிமைகளுக்காக முழங்கிய தலைவர்!

அதிமுக வசம் அப்போது வெறுமனே 18 எம்பிக்கள்தான். ஆனால், டெல்லி அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் ஜெயலலிதாவின் கையில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், “ஜெயலலிதாவிடமிருந்து அழைப்பு வருமா? அனுமதி கிடைக்குமா?” என்று மணிக்கணக்கில் காத்திருந்த நாட்களும் உண்டு. ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மட்டுமல்ல… இந்த முறை ஜெயலலிதா என்ன சொல்லி அனுப்புவாரோ என்று டெல்லியில் இருந்தபடியே பரிதவித்துக்கொண்டிருப்பார் பிரதமர் வாஜ்பாய். முதலில் ராம்ஜெத்மலானி உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கச் சொன்ன ஜெயலலிதா, ஒருகட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

Read More »

’96’ ஜானுவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு!

’96’ படத்தில் சிறுவயது ஜானு கேரக்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பால், அதில் நடித்த கவுரி கிஷன் மலையாளத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’96’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்தனர். ஜனகராஜ், பகவதி பெருமாள், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்த இப்படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்தார். ...

Read More »

அப்பிளை பின்தள்ளிய சீன நிறுவனம்!

அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் அப்பிளை பின்தள்ளி சீன நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறது. சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் மூன்றாவது காலாண்டில் அப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சீன நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்தியா உள்பட இதர சந்தைகளில் Mi பேன்ட் 3 சாதனம் அதிகளவு விற்பனையை பெற்று வரும் நிலையில், சியோமி நிறுவனம் அணியக்கூடிய சாதனங்களுக்கான சர்வதேச சந்தையில் 21.5 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. சியோமி நிறுவனத்தைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 13.1 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது ...

Read More »

இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடிதம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ‘ஆப்கானிஸ்தானில் கடந்த 17 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நமது இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் உங்கள்(இம்ரான்கான்) பிராந்தியத்தில் முக்கிய பிரச்சினையாக உள்ள இதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். எனவே தலீபான்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கவேண்டும். சமாதான பேச்சுக்கும் உதவி செய்யவேண்டும்” ...

Read More »

ஒரே படத்தில் 8 முன்னணி நடிகைகள்!

என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், மொத்தம் 8 முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மறைந்த நடிகை ...

Read More »

விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது – ஹேசில்வுட்

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ...

Read More »

சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வா பிரதமர்!?

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதிசெயலகத்திலிருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டும் என ஐக்கியதேசிய முன்னணி பிடிவாதம் பிடிப்பதால் ஜனாதிபதி மாற்று வழி குறித்து சிந்தித்து வருகின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன   இதன் காரணமாக சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிந்திக்கின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் ...

Read More »

7 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணை!

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட  எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு  முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த்தல் பத்திரம் ...

Read More »

கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம்

வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும் இடப்பட்டது. பௌத்த மதத்தின் வழிநின்று ...

Read More »