குமரன்

ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள்!

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.   இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக இம்முறை 41 வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.  இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 16 உறுப்பினர்களும் சுயாதீன வேட்பாளர்களாக 17 பேரும்  புதிய கட்சிகளின் சார்பில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மர்மமாக கொல்லப்பட்ட இந்திய பெண்!

அவுஸ்திரேலியாவில் தனது மனைவி கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் கூற்று “மிகவும் சாத்தியமற்றது” என அவருடைய கணவர் கூறியுள்ளார். இந்தியாவை சேர்ந்த பிரபா அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார். அவருடைய திறமையை பார்த்து நிறுவனமும் விசா காலத்தை நீட்டித்து கொடுத்திருந்தது. மார்ச் 7, 2015 அன்று தன்னுடைய கணவர் குமார் உடன், பிரபா செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, மர்ம நபர் திடீரென கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு ...

Read More »

ராவணனை வணங்கும் வினோத கிராமம்!

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம். சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை இந்து கடவுள் ராமன் வெற்றி கொண்டதை, நன்மை தீமையை வென்றதன் அடையாளமாக கருதி தசரா விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராமனைப் போன்று ராவணனையும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் ...

Read More »

சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன்!

தேர்தலில் வெற்றி பெற்று தான் ஜனாதிபதியாகத் தெரிவானால் எந்த கட்சியையும் சாராது சுயாதீனமான ஜனாதிபதியாகவே கடமையாற்றுவேன் என்று தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். கொழும்பு – மன்றக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நான் ஓய்வு பெற்ற போது நாட்டுக்காக சேவை செய்திருக்கின்றேன் என்ற மனதிருப்தியுடன் ஓய்வு பெற்றிருந்தாலும் , அதன் பின்னர் நாட்டின் நிலைவரத்தை உணர்ந்து இன்னும் இந்நாட்டு செய்ய வேண்டிய சேவைகள் இருக்கிறது ...

Read More »

மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் ஒரு தொகையை கடற்படைக்கு…..!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் கோரிக்கைக்கு அமைய,    அனுராதபுரம்  ‘ சந்த ஹிரு சேய’ நினைவுத் தூபியில் வைப்பதற்காக  தங்கத்தினாலான சமாதி நிலை புத்தர் சிலையை அமைக்க, யாழ்.  மாதகல் கடலில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கத்தில்  8 கிலோவை  கடற்படைக்கு வழங்கியதக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விஷேட விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இந்த 8 கிலோ தங்கத்தை பயன்படுத்தி ஒரு புத்தர் சிலையும், இதற்கு மேலதிகமாக இலங்கை வங்கி வழங்கியுள்ளதாக ...

Read More »

பிபிசி வெளியிட்ட தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே இந்தியப் படம்!

பிபிசி வெளியிட்ட 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியப் படம் இடம்பெற்றுள்ளது.  அது சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும். பிபிசி 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் பட்டியலை வெளியிட்டது. இதற்காக 43 நாடுகளில் இருந்து 209 இயக்குநர்களின் படங்கள் முதல்கட்டமாகத் தேர்வாகின. அவற்றில் இருந்து தலைசிறந்த 100 உலக சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 19 மொழிகள் மற்றும் 24 நாடுகளில் இருந்து 64 இயக்குநர்களின் 100 படங்கள் உள்ளன. இதில் முதலிடத்தை ஜப்பான் ...

Read More »

சூ என் லாய் முதல ஜி ஜின் பிங் வரை!

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சீனப் பிரதமர் சென்னைக்கு வரவிருக்கிறார். சீனப் புரட்சியில் தனது மாணவப் பருவத்திலிருந்தே பங்கேற்று அந்நாட்டின் முதல் பிரதமரான சூ என் லாய் 1960-ல் சென்னைக்கு வந்திருந்தார். இப்போது இருக்கக்கூடிய ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை நகர பள்ளிக் குழந்தைகளெல்லாம் பேருந்து மூலம் அந்த மைதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். பாண்டுங் மாநாட்டுக்குப் பிறகு, பஞ்சசீலக் கொள்கையை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டு ‘இந்தி – சீனி பாய் பாய்’ என்று சொன்ன காலம் அது. விளம்பரத் ...

Read More »

3 ஆய்வாளர்களுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு !

ஸ்டாக்ஹோம் உடல் செல், ஆக்ஸிஜன் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 2 ஆய்வாளர்களுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளருக்கும் என மொத்தம் 3 பேருக்கும் சேர்த்து 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நோபல் ...

Read More »

தாக்குதல் தொடர்பான வதந்திகளில் உண்மையில்லை!

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இவ்வாறான தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. புலனாய்வு பிரிவு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) ஷாந்த கோட்டேகொட, ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார். எனினும், பரவியுள்ள வதந்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

விண்வெளியில் தனியாக நடக்கப்போகும் வீராங்கனைகள்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் கிரிஸ்டினா மற்றும் ஜெசிகா ஆகிய 2 வீராங்கனைகள் வருகிற 21-ந்திகதி வீரர்கள் துணையின்றி விண்வெளியில் தனியாக நடக்க போவதாக நாசா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வது வழக்கம். ...

Read More »