குமரன்

இலவசமாக சட்ட உதவிகளை வழங்க ஐ.தே.க.வினால் இரண்டு சட்டத்தரணிகள் நியமிப்பு

சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்ட காரணத்தால் யாராவது காவல் துறையால்  கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டால் அவர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்காக இரண்டு சட்டத்தரணிகளையும் நியமித்திருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம் காவல் துறையைக்கொண்டு கைது செய்துவரும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மக்களை பயமுறுத்தும் ...

Read More »

ராஜபக்ஷவினருடன் அரசியல் ‘டீலே’ ரணிலின் நாடாளுமன்ற வருகை

ராஜபக்ஷவினருடன் செய்துகொண்டுள்ள அரசியல் ‘டீல் ‘ காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகின்றார். அவர் எதிர்க்கட்சியின் பக்கம் அமர்ந்தாலும் அரசாங்கத்தை பலப்படுத்தும் பணியையே முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். ரணில் – ராஜபக் ஷ அரசியல் டீல் குறித்து எமக்கு புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை எனவும் அவர் கூறுகின்றார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த தனது கருத்தை தெரிவிக்கும் போதே ...

Read More »

மருத்துவ சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் விருது பெறும் தமிழர்!

மருத்துவம் மற்றும் பல்கலாச்சார அமைப்புகளுக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Order of Australia Honours விருதினை வைத்தியர்  செல்வேந்திரா செல்வநாயகம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்து மலேசியாவில் கல்வி கற்று 1974 ஆண்டு அவுஸ்ரேலியாவில் வந்தடைந்தார். 60 ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் வைத்தியராக உள்ளார்.

Read More »

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி – 175 பேரின் கதி என்ன?

சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது. உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்து சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்கள் ஏமன் நாட்டின் பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணித்து சவுதி அரேபியா செல்ல வேண்டியுள்ளது. ...

Read More »

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், ...

Read More »

நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி

தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும், வழங்கப்படும் நிதிக்கான பற்றுச்சீட்டும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் ...

Read More »

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் ...

Read More »

கோட்டாவை சந்திக்கிறது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் கட்சிகளின் தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். இதன்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக மட்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை, கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.

Read More »

கண்மூடித்தனமாக கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது

இலங்கையில் முஸ்லீம்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும் கண்மூடித்தனமாக கைதுசெய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பத்தாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானம்-தகவல்தொடர்பில் தவறான விடயங்களை கொண்டுள்ளது-அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பன்முக முன்னேற்றத்தை கருத்தில் கொள்வில்லை ...

Read More »

கிறிஸ்மஸ் தீவிலிருந்து தமிழ் குடும்பம் விடுதலை!

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் பேர்த்தில் வசிப்பதற்கு அனுமதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சர் அலெக்;ஸ் ஹாக் அறிவித்துள்ளார். பேர்த்தில் அவர்கள் சமூக தடுப்பு முறையின் மூலம் வசிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்மானத்தின் மூலம் நான் எல்லைகளை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியான கொள்கைகளையும் தடுப்பில் உள்ள சிறுவர்கள் தொடர்பான கருணையையும் சமநிலைப்படுத்தியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்றை தீர்மானம் குடும்பத்தை கிறிஸ்மஸ்தீவு தடுப்பிலிருந்து விடுதலை செய்கின்றது,அவர்கள் தங்கள் கிசிச்சையை முன்னெடுக்க உதவுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இன்றைய தீர்மானம் ...

Read More »