குமரன்

ரோயல் பார்க் கொலை குற்றவாளி ; வெளிநாடு செல்ல பயணத் தடை!

ரோயல் பார்க் கொலை ஜூட் ஸ்ரீமந்த என்டனி ஜயமஹவுக்கு வெளிநாடு செல்வதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தமைக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கடந்த 13 ஆம் திகதி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில் குறித்த மனுவானது இன்றைய தினம் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் ...

Read More »

ஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு!

வொய்ஸ் ரியூப் எனப்­படும்  யூ ரியூப் அலை­வ­ரி­சையின், செம்மைப்படுத்­து­ன­ரான துஷாரா விதா­னகே சி.ஐ.டி. விசா­ர­ணை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.   நேற்று காலை 8.30  மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ரான அவ­ரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பின்­ன­ரே அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். துஷாரா விதா­ன­கே­வுக்கு எதி­ராக சிங்­கள அமைப்­பொன்று செய்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அவர் அவ­ரது த லீடர் வலைத்தளத்தில்  பதி­விட்ட விடயம் ஒன்­றினை ...

Read More »

முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு!

அமெரிக்காவின்  கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர்,  என்பவரால் குறித்த கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றுமுன்தினம்  குறித்த ஆற்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது நீருக்குள் தொங்கவிடப்பட்டிருந்த ...

Read More »

விஜய் சேதுபதிக்கு பிடித்த 4 நடிகர்கள்!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தனக்கு பிடித்த 4 சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை கூறியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான அவரது சங்கத்தமிழன் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் என தமிழில் அடுத்தடுத்து ரிலீசுக்கு அவரது படங்கள் தயாராகி வருகின்றன. இது தவிர தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். இந்தியிலும் அமீர்கானுக்கு வில்லனாக மிரட்ட ...

Read More »

ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகை உடன்படிக்கையை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்குமா?

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகைக்காலம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய சாத்தியம் குறித்து சீனாவிற்கு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் தெரியப்படுத்தப்பட்டிருக்கக்கூடும். அல்லாவிட்டால் சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குத்தகைக் காலத்தை மீள் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் திட்டம் குறித்து பகிரங்கமாக ஜனாதிபதி கோத்தபாய கூறியிருக்க மாட்டார் என்று அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு விவகார சஞ்சிகையான பாரத் சக்தியின் பிரதம ஆசிரியர் நிதின் கோகலேவிற்கு அளித்த நேர்காணலில் ஜனாதிபதி ராஜபக்ஷ 99 வருடக் குத்தகையை இலங்கை மக்கள் ...

Read More »

சிறிலங்கா சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டார்!

நியுயோர்க் டைம்ஸ் தமிழில் – ரஜீபன் தேர்தல் முடிவடைந்து சில நாட்களிலேயே, ராஜபக்ச அரசியல் வம்சாவளியை விமர்சிப்பவர்கள் மீதான அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள் மீண்டும் ஆரம்பமாகிவிட்டன என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின்  மனித உரிமை மீறல்கள் ஊழல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் இலங்கையை விட்டு தப்பியோட முயல்கின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள விடயமாக ஒரு சம்பவம் காணப்படுகின்றது. திங்கட்கிழமை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவரை வானில் கடத்திய இனந்தெரியாத நபர்கள் அவரின் ...

Read More »

கோத்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட வைகோ கைது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட  ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோ கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ  வெற்றி பெற்றதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு வந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், கோத்தாபய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடியின் சார்பில் அழைப்பு விடுத்தார். இதை ஏற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு இன்று நண்பகல் புறப்படட்டார். இன்று மாலையில் டெல்லி சென்றடையும் அவருக்கு ...

Read More »

இந்தியா நோக்கி புறப்பட்டார் கோத்தாபய !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திக்கவுள்ளதுடன், இந்திய பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ஏனைய இந்திய பிரமுகர்கள் பலரை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ...

Read More »

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை?

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள். அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் ...

Read More »

மகனுக்கு உருக்கமாக கடிதம் எழுதிய ஜெனிலியா!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, தனது மகனுக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சந்தோஷ் சுப்ரமணியன், வேலாயுதம், சச்சின் உள்பட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. மும்பை நடிகையான இவர், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், மூத்த மகன் ரியானுக்கு 5வது பிறந்த நாளை கொண்டாடிய ஜெனிலியா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்பான ரியான், ஒவ்வொரு பெற்றோரும் அவன் வளர ...

Read More »