ஊடகவியலாளர் துஷாரா விசாரணையின் பின் விடுவிப்பு!

வொய்ஸ் ரியூப் எனப்­படும்  யூ ரியூப் அலை­வ­ரி­சையின், செம்மைப்படுத்­து­ன­ரான துஷாரா விதா­னகே சி.ஐ.டி. விசா­ர­ணை­களின் பின்னர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.   நேற்று காலை 8.30  மணிக்கு சி.ஐ.டி.யின் கணனிக் குற்­றங்கள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவில் ஆஜ­ரான அவ­ரிடம் அங்கு பல மணி நேரம் சிறப்பு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில், வாக்குமூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அதன் பின்­ன­ரே அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

துஷாரா விதா­ன­கே­வுக்கு எதி­ராக சிங்­கள அமைப்­பொன்று செய்த முறைப்­பாட்டை மையப்­ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அவர் அவ­ரது த லீடர் வலைத்தளத்தில்  பதி­விட்ட விடயம் ஒன்­றினை மைய­ப்ப­டுத்தி இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­ற­தா­கவும் அறிய முடி­கின்­றது.  நேற்று முன்தினம்   நண்­பகல் துஷாரா விதா­னகே விசா­ர­ணை­க­ளுக்கு அழைக்­கப்­பட்ட நிலையில்,  அன்று  அவர் விசா­ர­ணைக்கு செல்­லவில்லை. நேற்று கலை 8.30 மணிக்கு  சி.ஐ.டி.யில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.  கடந்த அர­சாங்­கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்­ப­டுத்­தப்­பட்ட ‘என்­டர்­பி­ரைஸஸ் ஸ்ரீலங்கா’, ‘கம்பெர­லிய’ ஆகிய திட்டங்களின் பிரசார பொறுப்பாளராக துஷாரா விதானகே செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.