குமரன்

டைம் பத்திரிகையின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டா துன்பெர்க் தெரிவு !

காலநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய சுவீடன் நாட்டு மாணவியான கிரெட்டா துன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக ‘டைம்’ பத்திரிகையால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டவட்டர்களில் 16 வயதுடைய கிரேட்டா துன்பெர்க் தான் மிகவும் இளையவர். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே வகுப்புகளை புறக்கணித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டெக் மிகவும் பிரபலமானது. அந்த ...

Read More »

2019 இல் உலக நாடுகளில் 250 பத்திரிகையாளர்கள் சிறையில்!

2019 இல் தங்கள் எழுத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு மிகவும் அதிகமானதாக காணப்படுகின்றது. சீனா பத்திரிகைகள் மீதான தனது இரும்புப்பிடியை மேலும் கடினமாக்கியுள்ளஅதேவேளை  துருக்கி சுயாதீன செய்தியிடலை முற்றாக தடை செய்துள்ள நிலையிலேயே இந்த சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் சிறையிலிருந்து விடுதலையான பத்திரிகையாளர்கள் நீதிமன்ற விசாரணைகளையும் மேல்முறையீடுகளையும் எதிர்கொண்டு காத்திருக்கின்றனர். ஏதேச்சதிகாரமும், ஸ்திரமற்ற தன்மையும், ஆர்ப்பாட்டங்களும் பல பத்திரிகையாளர்கள் மத்திய கிழக்கில் சிறைகளில் வாடும் நிலையை உருவாக்கியுள்ளது.குறிப்பாக சவுதி அரேபியாவில் இந்த நிலை காணப்படுகின்றது,உலகில் பத்திரிகையாளர்கள் அதிகளவு ...

Read More »

கோதுமை மாவின் வரியைக் குறைக்க அமைச்சரவை அனுமதி!

கோதுமை மாவின் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக கோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடுகிறது!

அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் இக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையில் சபாநாயகர், பிரதமர்  ஆகியோர் உத்தியோகபூர்வமாக பங்குப்பற்றுவார்கள். அத்தோடு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசவிற்குஅரசியலமைப்பு பேரவை கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்றம் கூடி எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி ஏற்காமையினாலேயெ இதற்கான காரணமாகும். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்றி அரசியலமைப்பு சபை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இந்தியில் பேச மாட்டேன்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தியில் பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார். அதன்பிறகு தனக்கு இந்தி நன்றாக தெரியும் என்று ...

Read More »

அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியானது!

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 29 அமைச்சுக்களுக்கு பொறுப்பான விடயதானங்கள் குறித்த வர்ததமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு https://drive.google.com/file/d/1apTdv_bfnxbqO2oXwzeSUfW5GOvo2iG5/view

Read More »

ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். ஹட்டனில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக ...

Read More »

‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ – பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக ...

Read More »

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்!

குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அதை­யெல்லாம் காதில் போடாமல் கோத்­தா­பய ராஜ­பக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி அழகு பார்த்­தனர்  மக்கள். எதிர்­பார்த்­தது போலவே தான் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் அண்ணன் மஹிந்­தவை  பிர­த­ம­ராக்­கினார்  ஜனா­தி­பதி  கோத்­தா­பய. தனது மற்­று­மொரு அண்ணன் சமல் ராஜ­பக் ஷவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்­கினார். மக்­களின் மெளனம் தொடர்­கி­றது. தேர்தல் காலத்தில்  எதி­ர­ணி­யி­ட­மி­ருந்து ஒலித்த குடும்ப அர­சியல் கோஷங்­களை  இப்­போது காண­மு­டி­ய­வில்லை. தேர்தல் ...

Read More »