தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தியில் பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார்.

அதன்பிறகு தனக்கு இந்தி நன்றாக தெரியும் என்று கூறிய அவர், “நான் தென் இந்தியாவை சேர்ந்தவள். அதனால் மொழி சரளமாக இருக்காது என்பதால் இந்தியில் பேச மாட்டேன்” என்று கூறினார்.
Eelamurasu Australia Online News Portal