குமரன்

சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்; உள்நாட்டு சட்டத்துக்கமையவே நடவடிக்கை!

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கானியா கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையை இந்த நாட்டில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக இலங்கையின் முன்னாள் சுவிட்சர்லாந்து தூதுவர் ஜோக் பெடரன் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ...

Read More »

பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி!

பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து,  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை ...

Read More »

நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!

நியூஸிலாந்தில் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தனி நபர் ஒருவர் மேற்கொண்ட கோ துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் நியூஸிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஆயுத தடை சட்டத்தின்மூலம் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளும் பொலிஸாரும் ...

Read More »

உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­தல்கள் காட்­டு­மி­ராண்­டித்தனவை!

இலங்­கையில் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளையும், நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளையும் இலக்­கு­வைத்து உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் முற்­றிலும் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னவை என்றும், அவை பிரி­வி­னையை விடுத்து சகிப்­புத்­தன்­மை­யையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்­புவோர் மீதும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் என்றும் பிரித்­தா­னிய வேல்ஸ் இள­வ­ரசர் சாள்ஸ் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். பிரித்­தா­னி­யாவின் கிழக்கு பிராந்­தி­யத்தில் நடை­பெற்ற இம்­மா­னுவேல் கிறிஸ்­தவ கூட்­ட­மொன்றில் இலங்­கையில் நடை­பெற்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் பற்றிக் கருத்து வெளி­யிட்ட சாள்ஸ், அவை ‘உல­கெங்­கிலும் உள்ள மதச்­சு­தந்­தி­ரத்தின் மீதான தாக்­கு­த­லாகும்’ என்றும் தெரி­வித்­தி­ருக்­கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் ...

Read More »

ஆஸி. தொடரின் போது ஹர்திக் பாண்டியா ஃபிட் என்று கூற என்.சி.ஏ.வுக்கு ‘பிரஷர்’?

பும்ரா காய விவகாரத்தில் வெளியே அவர் சிகிச்சை பெற்று உடற்தகுதிச் சான்றிதழுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகிய விவகாரத்தில் என்.சி.ஏ. மறுப்பின் பின்னணியில் பல சமயங்களில் ஒரு வீரரை ஃபிட் என்று கூற நெருக்கடி ஏற்படுவதும் மீண்டும் அவர் உடனேயே காயமடைந்தார் என்றால் என்.சி.ஏ. மீது விமர்சனங்கள் எழுவதும் வழக்கமாகி வரும் விஷயம் தெரியவந்தது .அதாவது காயமடைந்த வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பும்ரா விவகாரத்தில் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளித்தவர் வேறு ஒரு மருத்துவர், ...

Read More »

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இந்தக் கூட்டணியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார். ‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரஜினி, ஷாரூக் கான், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வெற்றிமாறன் சந்தித்துப் ...

Read More »

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றம்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் ...

Read More »

பாலஸ்தீனத்தில் யுத்த குற்றங்கள் – விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச நீதிமன்றம் முயற்சி!

மேற்கு கரையிலும்   காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை  தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் ...

Read More »

வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கக்கோரி போராட்டம் நடத்தும் அப்பாவி இந்தியர்கள்: நடிகை ஆர்த்தி

உலக வரலாற்றிலே வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க வேண்டுமென போராட்டம் செய்யும் அப்பாவிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்வது ஆச்சர்யம் என நடிகை ஆர்த்தி கூறியுள்ளார். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ...

Read More »

ஆஸ்திரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் ...

Read More »