குமரன்

கருப்பினத்தவர் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் அடித்து கொலை

பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை ...

Read More »

ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்

தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதையடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. இந்தநிலையில் இந்த 2020-ம் ஆண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேடவைத்தவர் ...

Read More »

9 கொரோனா மரணங்கள் இன்று பதிவு – மொத்த எண்ணிக்கை 83 ஆக உயர்வு

இலங்கையில்  ஒரே நாளில் ஒன்பது கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் அதிகளவான கொரோனா மரணங்கள் பதியப்பட்டுள்ளது இதுதான் முதன் முறையாகும்.

Read More »

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த குழு இது குறித்து ஆராய்ந்துள்ளது. அரசாங்கம் நியமித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என்பது அவர்களின் கருத்தாக உள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியில் மிக வேகமாகப் பரவும் கொரோனா!

தெற்கு அவுஸ்திரேலியாவில்  கொரோனாத் தொற்றுப்  பரவலைத்  தடுக்கும் வகையில் மிகக் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் அதிகபட்சமாக அடிலெய்ட் (Adelaide) மாகாணத்தில் கொரோனாத் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து அங்கு 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு  பாடசாலைகள், பூங்காக்களில் உடற்பயிற்சி, பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது, திருமணம், இறுதி ஊர்வலம் என அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வீட்டிற்கு ஒருவர் மட்டும் வெளியில் சென்று அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி ...

Read More »

சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல்…

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிம்புவின் புதிய படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதன் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றது. இதனால் பிரச்சினை எழுந்தது. அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் ...

Read More »

ஆஸ்திரேலிய படை வீரர்கள் மீது நடவடிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், 39 பேரை ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் கொன்றது போர்க்குற்றம் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்க போரில், 39 பேரை ஆஸ்திரேலிய அதிரடி படை வீரர்கள் சட்டத்துக்கு புறம்பான விதத்தில் கொன்றது போர்க்குற்றம் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி விமானங்களை மோதி கொடூர ...

Read More »

முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் 560 பேரை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. ...

Read More »

செயற்கைசுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத நிலை!

ஜனாதிபதி- நாடாளுமன்ற தேர்தல்களின் போது இந்த அரசாங்கம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் காணப்பட்ட சாதகமான விடயங்கள் எவையும் வரவுசெலவுதிட்டத்தில் இடம்பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். பொதுமக்களிற்கு வழங்கப்படவேண்டிய செயற்கை சுவாசக்கருவிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுவாசிக்க முடியாத பொதுமக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். பொய்கள் ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் தனது இலக்குகளை அடைகின்றது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது, மூன்றில் இரண்டை பெற்றுள்ளது 20வது திருத்தத்தை நிறைவேற்றி இரட்டை பிரஜாவுரிமை குறித்த தனது பிரச்சினைக்கு ...

Read More »

தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை – திலகர்

பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை இலங்கை தேசத்தின் சமூக பொருளாதார பிரச்சினையாக அணுகப்படாதவரை அதற்கு உரிய தீர்வினை நாட முடியாது என்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா . உரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவருடனான உரையாடல்; கேள்வி : ஆயிரம் ரூபா சம்பள விடயத்தை அரசாங்கம் 2021 வரவு செலவு திட்டத்தில் இணைத்து இருப்பது பற்றிய உங்களது கருத்து என்ன ? திலகர்: சாத்தியமில்லாத அறிவிப்புதான் ஆனாலும் வரவேற்கத்தக்கது. இந்த அறிவிப்பினை சாதகமாக்கி தோட்டத் தொழிலாளர்களின் ...

Read More »