கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யவேண்டும்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சாத்தியமா என்பதை ஆராய்வதற்காக அரசாங்கம் நியமித்த குழு இது குறித்து ஆராய்ந்துள்ளது.

அரசாங்கம் நியமித்த குழுவினர் இது குறித்து ஆராய்ந்துள்ளனர் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி என்பது அவர்களின் கருத்தாக உள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.