Tag Archives: ஆசிரியர்தெரிவு

திருமறைக் கலாமன்ற இயக்குநர் மரிய சேவியர் அடிகளார் காலமானார்

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளார் இன்று(1) காலமானார். இவர் யாழ்ப்பாணத்தில் திருமறைக் கலா மன்றம் என்ற ஒரு கலை அமைப்பை 1965 ஆம் ஆண்டளவில் ஆரபித்தார். 1965 ஆம் ஆண்டு உரும்பிராயில் மரிய சேவியர் அடிகள் பணி செய்த காலத்தில் ‘திருமறைக்கலாமன்றம்’ எனும் பெயருடன் இவ் அரங்க இயக்கம் செயற்படத் தொடங்கியது. உரும்பிராய், சுன்னாகம், மல்லாகம் என ஒன்றிணைந்த கலைஞர்களைக் கொண்டு மரியசேவியர் அடிகள் திருப்பாடல்களின் நாடகங்களை மட்டுமன்றி பல்வேறு விவலிய நாடகங்கள், இலங்கை வானொலிக்கான நாடகங்கள், கூத்துக்கள் எனப் பலவற்றையும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம்

தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சுமந்தபடி சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடந்துசென்ற இச்சிறுவன் அவ்வீதியால் சென்ற பெண்மணி ...

Read More »

மூன்றாவது கொவிட் அலை ஏற்படலாம் – அசேல குணவர்தன

மூன்றாவது கொவிட் அலை ஏற்பட கூடிய  ஆபத்து காணப்பட்டுவதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குண வர்தன தெரிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்றைய தினம் வெளியிடப் படும் என வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.   சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொதுமக்களின் நடவடிக்கைகள் மூலம் மூன்றாவது கொவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read More »

மறைந்த ஆயர் தமிழர்கள் சுயநிர்ணய உரிமையோடு வாழ வேண்டுமென்ற அவா கொண்டவர்

முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்குக் கொண்டு சென்றவர் இராயப்பு ஜோசப் ஆண்டகை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று இயற்கை எய்தியுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது இரங்கல் உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழர்களின் வரலாறு எனவும் அவரின் இழப்பானது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பேரிழப்பு எனவும் ...

Read More »

ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கார் பரிசு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் பலர் காயத்தால் விலகிய நிலையில் இளம் வீரர்கள் பிரமிப்பூட்டும் வகையில் விளையாடியதுடன், பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் வீறுநடைக்கும் முடிவு கட்டினர். இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி இந்தியாவின் வெற்றியில் முக்கிய ...

Read More »

தான்சானியா ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசலில் சிக்கி 45 பேர் பலி

2015ஆம் ஆண்டு முதல் தான்சானியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜான் மெகுபுலி கடந்த 17-ஆம் திகதி காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிடைய வைத்தது. அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஜான் மெகுபுலியின் உடலைக் காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர்.பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறிக் குதித்து அங்கு சென்றனர். அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்ததால் அங்கிருந்தவர்கள் ...

Read More »

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை கருத்திற்கொண்டு எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு முன்னெடுக்க பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு நிலைமை குறித்து பகுப்பாய்வு செய் யுமாறு இராணுவத் தலைமையகத்தால் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட விசேட பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்க இராணுவத் தலைமையகத்திற்கு அறிவித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்கமுடியாது

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா எரித்திரியா போன்று செயற்படமுடியாது என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார். மனித உரிமை தொடர்பான அனைத்து பிரகடனங்களிலும் இலங்கை கைச்சாத்தி;ட்டு அதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இலங்கைவடகொரியா எரித்திரியா போல செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மனிதஉரிமை பேரவை தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்ற கேள்வி;க்கு பதிலளித்துள்ள அவர் அரசாங்கம் இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் மோதல்போக்கின் மீது நம்பிக்கை வைக்ககூடாது என ...

Read More »

ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை

விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டு கொரோனா தொற்று பரிசோதனை முறையை கண்டு பிடித் துள்ளனர். இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றை இனங் காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையைக் கண்டு பிடித் துள்ளனர். கொரோனா தொற்றினை அறிந்துகொள்ள மிகவிரைவாக, இலகுவான முறையில் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்ள இங்கிலாந்து ஒக் ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் புதிய பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். அத்தோடு, இலங்கை பேராசிரியர் நீலிகா மாலவிகே இதற்குப் ...

Read More »

தமிழ்நாட்டை டெல்லிக்கு அடகு வைத்து விட்டார்கள்

எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. சென்னை மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில், தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து, திமுக கனிமொழி எம்.பி தேர்தல் பிரசாரம் செய்தார். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக வரப்போகிறார். அ.தி.மு.க.ஆட்சியில், தமிழகம் முழுவதும் சாலை ஏதும் போடப்படவில்லை. எட்டு வழிச்சாலை மட்டும் முதல்வர் பழனிசாமி போடுவார். அதில் தான் பணம் பார்க்க முடியும். தமிழகத்தில் அடிக்கல் நாயகன் எடப்பாடி பழனிசாமி. அவர் ...

Read More »