Tag Archives: ஆசிரியர்தெரிவு

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் 2000 அகதிகள்!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முயற்சியில் ஈடுபட்ட சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருவில் உள்ள தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் படகு வழியாக நுழைந்த இந்த அகதிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த தடுப்புக் காலம் எந்தவித வரையறைமின்றி வைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பற்றி வரும் ஜுலை மாதம் நடக்கவிருக்கும் தொழிலாளர் கட்சியின் தேசிய மாநாட்டில் ...

Read More »

முன்னாள் போராளி சாவினைத் தழுவியுள்ளார்!

உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார். ’உயிரிழை’ எனப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் தன்னெழுச்சி அமைப்பின் நீண்டகால பயனாளியான இவர், கடந்த 1991ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் ஸ்ரீ லங்கா படையினருடன் நடந்த நேரடி மோதலின் போது தனது முள்ளந்தண்டுப் பகுதியில் படுகாயமடைந்தார். அதன்பின்னர் இன்றுவரை இடுப்புக்கு கீழ் உணர்வில்லாமல் தனது வாழ்கையை பெரும் சவால்களுக்கு மத்தியில் கழித்து வந்த நிலையில் கடந்த ...

Read More »

வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டை!

வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டைஇன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்கோப்பாய் வடக்கு இலகடி என்ற பகுதியில் இந்த கைத்தொழில் பேட்டை, தாயக நேரப்படி இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த கைத்தொழில் பேட்டையில் 30 பேர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன்,மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. நவீனஇயந்திரங்களுடன் கூடிய இந்த கைத் தொழில் பேட்டையில் சித்திரம், தையல், புடைப்புச் சித்திரம்,கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குஉரையாற்றிய ஐ.பி.சி தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன், இன்னும் போர் ஒயவில்லைஎனவும் தொழிலுக்கான போர் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறினார். ...

Read More »

இந்தியாவில் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மெகன் மார்க்லே விருப்பம்!

மும்பையை சேர்ந்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்துக்காக சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மார்க்லே விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வருவது மைனா மகிளா தொண்டு நிறுவனம். கடந்த 2015-ல் தொடங்கப்படட இந்த அமைப்பு பெண்கள் சுயமாக சம்பாதிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு மெகன் மார்க்லே இந்தியா வந்தபோது மைனா தொண்டு நிறுவன பணிகளில் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக கூறினார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ...

Read More »

20வது அரசியலமைப்பு திருத்தம் முன்வரைவு அடுத்தவாரம்!

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இந்த முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த முன்வரைவினை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்பின் பிரகாரம் அது முன்மொழியப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதனிடையே, 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான கருத்து கணிப்பை நடத்துவதற்கு அண்ணளவாக 4 மாதங்கள் தேவைப்படும் என, ஜேவியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! “காக்கா அண்ணன்” மௌன விரதம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ...

Read More »

நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவாக 1 லட்சம் கையெழுத்துக்கள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ளனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாமெனக் கோரி ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை நடேசலிங்கம் – பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloela-வில் வாழ்ந்து வந்தனர். அவர்களது Bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததை அடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் ...

Read More »

ரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்!

5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெறும் இளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது. திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் ...

Read More »

ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்!

ஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் IO 2018 நிகழ்வில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதில் இடம்பெற்றிருந்த அம்சங்களில் ஒன்றான மென்ஷன் எனும் அம்சம், மின்னஞ்சல் டைப் செய்யப்படும் போது இடையே மற்றவர்களை டேக் செய்ய @ குறியீட்டை பயன்படுத்த வழி செய்கிறது. இந்த அம்சம் ஜிமெயிலில் மின்னஞ்சல் டைப் செய்யும் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் நடந்த தவறு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக நடாத்தப்படும் தேர்வில் பிழை இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. குடியுரிமைக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் அவ்வாறான ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என இந்த வாரம் தேர்வு எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியானது, அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான். இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவின் ...

Read More »