Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறிலங்காவிற்கு அவுஸ்திரேலியா 89 மில்லியன் நிதியுதவி!

சிறிலங்காவின் தெற்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளன. இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மூன்று வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Read More »

பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்!

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. ...

Read More »

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் ...

Read More »

அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது!

தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாரா அல்மிடா (24) என்ற மொடல் அழகிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிடும் நேர்மறையான பொன்மொழிகள் மற்றும் உலக நடப்புகள் அதிகளவில் அனைவராலும் கவரப்பட்டது . இதன் காரணத்தினாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.5 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வயிற்று புற்றநோயால் பாதிக்கப்பட்ட இவர், ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருத்து!

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் ...

Read More »

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று கையளிப்பு!

அரசாங்கத்திற்கு தாமதமாக்கும் நோக்கம் இல்லாமலிருந்தால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை 3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பினூடாக அனைத்தையும் கொண்டு வருவதற்கே நாம் முனைந்தோம். ஆனாலும் தற்போதைய அரசியல் ...

Read More »

முல்லைத்தீவில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா படை!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மக்கள் பயன்படுத்திய காணிகளை வேலி அடைக்கும் செயற்பாடு தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த பகுதியில் இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் வசித்து வந்த நிலையில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில்  ஏக்கர் பரப்பளவு காணியை அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணியை படையினர் ...

Read More »

மாற்றுக்களம்: மீண்டெழும் சிறகு!

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்புகிறாள் அந்தச் சிறுமி. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அவளிடம் ஆசை வார்த்தைப் பேசிட, பசியாற்றிட வீட்டில் யாருமில்லை. சிறுமியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கு வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு. நின்று பேசக்கூட நேரம் இல்லாத கார்ப்பரேட் அடிமைகள். வீட்டோடு தங்கியிருக்கும் பணிப்பெண் தன் ஸ்மார்ட் கைபேசிக்கு கரிசனம் காட்டுகிறாள். இரவில் வீடு திரும்பும் பெற்றோருக்காக மாலை வேளையிலிருந்து காத்திருக்கிறாள் அந்தப் பிஞ்சு சிறகு. இடைப்பட்ட வேளையில் ஓவியம் தீட்டுகிறாள். அந்த ஓவியத்தை தன் பெற்றோரிடம் காட்டுவதற்காக ...

Read More »

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!

கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம்   12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் ...

Read More »

போதைப்பொருள் கடத்த முயன்ற அவுஸ்திரேலியப் பெண்ணுக்கு மலேசியாவில் மரண தண்டனை!

மலேசியாவில் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணுக்கு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 54 வயதான மரியா எக்ஸ்போஸ்டோ என்னும் 3 பிள்ளைகளின் தாயான பெண்ணுக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்பேர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடமிருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குற்றந்நாட்டினை மறுத்த ...

Read More »