அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது!

தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான நண்பர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாரா அல்மிடா (24) என்ற மொடல் அழகிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிடும் நேர்மறையான பொன்மொழிகள் மற்றும் உலக நடப்புகள் அதிகளவில் அனைவராலும் கவரப்பட்டது .

இதன் காரணத்தினாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.5 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வயிற்று புற்றநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை எடுத்துவந்தார். புற்றுநோயின் தாக்கம் அதிகரித்ததால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது கூட, தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார், இவர் குணமடைய வேண்டும் என்பதற்காக இவரது ரசிகர்கள் பிராத்தனை செய்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இந்த இளம்பெண் நேற்று தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்டார்.

இந்தத் தகவலை இவரது காதலன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார், வாழ்க்கையோடு போராடி வந்த நாரா உயிரிழந்துவிட்டார். அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவள் இறந்தாலும் எனது இதயத்தில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். எனக்கு முன்மாதிரியாக இருந்த அவள் இனி நிரந்தரமாக ஒய்வெடுக்க சென்றுவிட்டாள் எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்தப் பதிவை 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் எனக் கூறப்படுகிறது