Tag Archives: ஆசிரியர்தெரிவு

வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்! – த்ரிஷா

‘திட்டமிட்டு இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை’ என த்ரிஷா பேட்டி அளித்துள்ளார். த்ரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கொடி’. தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து ‘மோகினி’ ரிலீஸாக இருக்கிறது. மாதேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அவரிடம் உரையாடியதில் இருந்து… ‘மோகினி’ படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன? முதன்முறையாக வைஷ்ணவி, மோகினி என ...

Read More »

சிறைச்சாலையில் உள்ள மாற்றுத்திறனாளி முறைப்பாடு!

யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தான் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி,  மாற்றுத்திறனாளியான கைதியொருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நீதிமன்றின் விளக்கமறியல் உத்தரவுக்கமைய, யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி​யே, யாழ். மனித உரிமைகள்  ஆணைக்குழுவின்  கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். மாற்றுத்திறனாளியான, குமாரசாமி பிரபாகரன், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு, இடுப்புக்கு  கீழ் இயங்காது.  அவ்வாறான மாற்றுத்திறனாளியான தனக்கு, சிறைச்சாலையில்  அதற்குரிய  எவ்வித ஏற்பாடுகளும்  காணப்படவில்லை என்றும் மலசலம்கூட கழிக்க முடியாது, பெரும் அவஸ்த்தைபடுவதாகவும், இவை, தனது உரிமையைப் பாதித்துள்ளது எனவும் ...

Read More »

விஜயகலா தொடர்பில் ஐ.தே.கவின் தீர்மானம் தான் என்ன?

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் கூடுகையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்குமென கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். கட்சி அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதோடு,  அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய, அப்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் ...

Read More »

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது – பாம்பியோ குற்றச்சாட்டு!

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகே வசித்து வந்தவர் மவுலின் ரதோட் (வயது 25). இந்திய மாணவரான இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று, அங்குள்ள கல்லூரி ஒன்றில் கணக்கியல் துறையில் பயின்று வந்தார். இவருக்கும், மேற்கு மெல்போர்னின் புறநகர் பகுதியான சன்பரியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவருக்கும் வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனியாக வசித்து வரும் அந்த ...

Read More »

துறைமுகம் சீனாவிற்கு விமான நிலையம் இந்தியாவிற்கு!-ராஜித

எந்த தடை ஏற்பட்டாலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக இணைப் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மரண தண்டனையை அமுல்படுத்தினால் GSP வரிச்சலுகை இல்லாமல் போகுமா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த சலுகை இல்லாமல் போனலும் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்திற்கு துணையாக இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராகவும் கடுமையான சட்ட ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்!

ஆஸ்திரேலியாவின் வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில், கொசுக்களை ஒழிக்கும் பெரிய அளவிலான பரிசோதனைக்கு, வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆராய்ச்சி அமைப்பும், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’டின் கொசுக்கள் ஒழிப்பு ஆராய்ச்சி அமைப்பான, ‘வெரிலி’யும் இந்த வெள்ளோட்டத்தை அண்மையில் மேற்கொண்டன. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை. எனவே, இனப்பெருக்கத் திறன் நீக்கப்பட்ட ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் ஏராளமாக உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வெரிலி உருவாக்கியது. தவிர, ஆய்வகத்தில் உருவாகும் பெண் கொசுக்களிலிருந்து, ஆண் கொசுக்களை மட்டும் பிரித்தெடுக்க, ரோபோக்களை வெரிலி பயன்படுத்துகிறது. ...

Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் செயற்கை நீர்வீழ்ச்சி!

சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டிடத்தில் இருந்து நீர் கீழே கொட்டும் அந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 350 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நீர்வீழ்ச்சி முழுவதும் மின்சார உதவியுடன் இயங்குகிறது. ஒரு மணி நேரம் இந்த நீர் வீழ்ச்சி ...

Read More »

செம்மணியில் மீண்டும் மனித புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி – நாயனர்மார்கட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஒர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன. குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக யாழ். காவல் துறை அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை காவல் துறை யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற ...

Read More »

பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்!

ஹிந்தி படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, தேவி, குலேபகாவலி படங்களுக்குப் பிறகு பிசியான நடிகராகி விட்டார். தற்போது லட்சுமி படத்தில் நடித்து முடித்திருப்பவர் அடுத்தப்படியாக பொன் மாணிக்கவேல் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோடிட்ட இங்களை நிரப்புக படத்தை அடுத்து உள்ளே வெளியே-2 படத்தை இயக்குவதாக கூறிவந்த பார்த்திபன், இப்போது பிரபுதேவாவை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தேவி படத்தில் ...

Read More »