Tag Archives: ஆசிரியர்தெரிவு

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து

உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் மக்கள் நாட்டின் தேர்தல் முறைமீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்து நடந்துகொண்ட விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்துள்ளது. இவ்வாறான ...

Read More »

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தற்காலிக விசாக்கள் கிடைத்தும், அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாத ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். காபூலில் செயல்பட்ட ஆஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் ஆஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற முடியாத நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 27ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட வெளியேற்ற விமானங்களை அடைய முடியாததால் இவர்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது. சாம், அவ்வாறான தற்காலிக விசா பெற்ற ஆப்கானியர்களில் ஒருவர். கடந்த 6 ஆண்டுகளாக ...

Read More »

‘‘நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்று விட்டது’’

கடைசி நிமிடத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விலகியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியின் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று(17) மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், ...

Read More »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் வரை நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலே​யே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

Read More »

பாக்- நியூசிலாந்து தொடர் இரத்து

பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கொண்டே இந்தத் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.  இறுதி நேரத்தில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதை இட்டு மனவருத்தம் அடைவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  

Read More »

அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை

அவுஸ்திரேலியாவுடன் செய்து கொண்ட புதிய பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவும் பிரிட்டனும் சர்வதேச அளவில் கடும்; எதிர்ப்பை சந்தித்துள்ளன. சீனாவை எதிர்கொள்வதற்கான முயற்சியாக கருதப்படும் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் பிரிட்டனும் அமெரிக்காவும் அணுசக்தியில் இயங்ககூடிய நீர்மூழ்கியை அவுஸ்திரேலியாவிற்கு வழங்கவுள்ளன. பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தனது முதுகில் குத்தியுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளது. மூன்று நாடுகளும் பனிப்போர்காலமனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என சீனா தெரிவித்துள்ளது. நீர்மூழ்கிகளிற்கான ஆயுதப்போட்டி ஆரம்பமாகலாம் என எச்சரித்துள்ள சீனாவின் குளோபல் டைம்ஸ் சீனாவின் முதல் பதில் தாக்குதலில் அவுஸ்திரேலியாவே முதலில் உயிரிழக்கலாம் ...

Read More »

குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசின் முடிவு

ஆஸ்திரேலிய நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 670 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக்கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Read More »

தமிழ் அகதி குடும்பத்தினரின் விசா காலம் மேலும் நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினரின் நடப்பு இணைப்பு விசாக்கள் காலாவதியாக இருந்த நிலையில், அவர்களது விசா காலம் மேலும் 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இதுதொடர்பான கொள்கை முடிவினை எடுத்துள்ளதாக அக்குடும்ப வழக்கறிஞர்களிடம் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

Read More »

ஆஸ்திரேலியக் குடியுரிமை விதிகளில் மாற்றம் அறிமுகம்

சில திறமைசாலிகள் குடியுரிமை பெறுவதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில், குடியுரிமை விதிகளில் சில மாற்றங்களை குடியேற்றம், குடியுரிமை, புலம்பெயர்ந்தோர் சேவைகள் மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர், Alex Hawke நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். “ஆஸ்திரேலிய குடியுரிமை ஒரு அரிய சலுகை.  அது எளிதில் கிடைக்கக்கூடியதொன்றல்ல.  விண்ணப்ப தாரர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.  நற்குணம் படைத்தவர்களாக (character) அவர்கள் இருக்க வேண்டும், அற நெறி கொண்டவர்களாக (values) அவர்கள் இருக்க வேண்டும், அத்துடன் ஆங்கில மொழி தெரிந்தவர்களாக இருக்க ...

Read More »

அனுராதபுரம் சிறைச்சாலை விவகாரம் – அமைச்சரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்

அரசாங்கத்தின் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இராஜாங்க அமைச்சரை விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. இராஜாங்க அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை ...

Read More »