Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலிய முகாம்களில் அலைப்பேசிகளை தடைச்செய்யும் மசோதா

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்கள் அலைப்பேசி பயன்பாட்டை தடைச்செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசால் முன்மொழியப்பட்ட புலம்பெயர்வு திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஆஸ்திரேலிய மேலவையில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், இம்மசோதா முன்மொழியும் அலைப்பேசி தடை கனடா மற்றும் இன்னும் பிற நாடுகளில் மீள்குடியேற முயற்சிக்கும் அகதிகளுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது அகதிகள் மேலும் கூடுதலான காலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் இதனால் ஆஸ்திரேலிய வரிப்பணம் பல மில்லியன்கள் செலவாகக்கூடும் என Ads-Up Refugee Network அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ...

Read More »

சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு

சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல குழந்தைகள் உணவு கூட ...

Read More »

பன்னாட்டுப் பொறுப்புக் கூறல் அமைப்பை இலங்கையில் ஐ.நா. நிறுவவேண்டும்

“இலங்கை அரசாங்கம் அரசு நல்லிணக்கம், பதிலிறுப்பு, மனிதஉரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக செயல்பாடுகளை எடுக்கப்படுகின்றது. இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் (பதிலிறுப்பு) அமைப்பை நிறுவவேண்டும்” என ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி யெனீவாவில் இடம்பெற்று வருகிறது . இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமது கடமையைச் செய்யவில்லை

ஜெனீவாவில் நிஷா பீரிஸ் குற்றச்சாட்டு “நான்கு ஆண்டுகளுக்குமுன் காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் உருவாக்கபட்டது. ஆனால் இந்த அலுவலகம் தனது கடைமையைச் செய்யாததால் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது” என ‘பாலம்’ அமைப்பின் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய நிஷா பீரிஸ் குற்றஞ்சாட்டினார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது . ஒக்டோபர் 7 ...

Read More »

தியாகி திலீபனின் நினைவை நடத்த முயன்ற ஆறு பேருக்கு நீதிமன்றில் வழக்கு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டு. தலைமையக காவல் துறை வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், ...

Read More »

வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு படையினர் அச்சுறுத்தல்

வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளரை பின்தொடர்ந்த இராணுவத்தினர் காணொளி எடுத்துள்ளதுடன் கைதுசெய்வோம் என அச்சுறுத்தியுள்ளனர். தமிழ்கட்சிகளின் அழைப்பினை ஏற்று வடக்குகிழக்கில்முழுகதவடைப்பு இடம்பெற்றுவரும் நிலையில் அச்சுவேலி பகுதியில் படையினரும் புலனாய்வாளர்களும் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வலிகிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோசினை அச்சுறுத்தும் வகையில் படையினர் செயற்பட்டுள்ளனர். நானும் உபதவிசாளரும் அப்பகுதியில் கடை உரிமையாளர்களிடம் பேசியபோது அவர்கள் தங்கள் கடைகளை திறக்குமாறு படையினரும் காவல் துறையினரும் புலனாய்வாளர்களும் அச்சுறுத்தினர் என தெரிவித்தனர் என நிரோஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் பஜிரோ ரகவாகனத்தில் வந்த ...

Read More »

தாயகத்தில் ஹர்த்தால்- யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு !

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; “அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள். தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபட ...

Read More »

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு புதிய தேசிய அமைப்பாளர் நியமிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   புதிய தேசிய அமைப்பாளராக    மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயத்தினை தெரிவித்தார். முன்னதாக தேசிய அமைப்பாளராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக கூறிஅவர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக  தெரிவித்தார்.​ மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   உப செயலாளராக தென்  தமிழீழம் , திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன்( ...

Read More »

முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணன் நீக்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய குழு இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த தகவலை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு ...

Read More »

கொவிட்-19: தடுப்புமருந்தானது பயன்பாட்டுக்கு வருவதற்குள் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்!

உலகளவில் கொரோனாத் தொற்றுக்கான தடுப்புமருந்துகள் பரவலாக கிடைப்பதற்குள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்குமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வினுடைய அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான்(Michael Joseph) தெரிவித்துள்ளார். மேலும் இது, தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகப் பெரிய சவால் எனவும் அவர் ...

Read More »