தாயகத்தில் ஹர்த்தால்- யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு !

வடக்கு, கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“அரசினதும் அதன் படைகளின தும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப் படவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் எவரும் கற்றல் செயற்பாடுகளில் பங்கெடுக்க மாட்டார்கள்.

தேவையற்ற சில தரப்புக்கள் மாணவர்களை இலக்கு வைத்து சில சதி நடவடிக்கைகளில் ஈடுபட லாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தங்கியிருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்க்குமாறும் கோருகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.