Tag Archives: ஆசிரியர்தெரிவு

இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் இது வரையில் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பெரும்பாலான வேட்பாளர்கள் செயற்பட்டதாக ஆணைக்குழு இனங்கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த ...

Read More »

இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறுவது முற்றிலும் பொய்யானதாம்!

இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு ...

Read More »

மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ள சிட்னி மக்கள்!

அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் ...

Read More »

வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு – 5 பேர் பலி, பலர் மாயம்!

நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை திடீரென இன்று வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் 5 பேர் உயிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் பலரை காணவில்லை என அதிகாரிகள் ...

Read More »

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை – வடகொரியா திட்டவட்டம்

அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.உலகின் இரு எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அப்போது வடகொரியாவை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ...

Read More »

சீனா வழங்கிய வலுவான ஆதரவை மறக்கமாட்டேன்! -மஹிந்த ராஜபக்

சிறிலங்காவின் வளர்ச்சிக்கு சீனா வழங்கிய வலுவான மற்றும் நீண்டகால ஆதரவை தனது அரசாங்கம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவுடனான நட்புறவை எதிர்வரும் காலங்களிலும் தாம் தொடரவுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார். சின்ஹுவா செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போதே  சிறிலங்கா பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு வழங்கிய தீர்ப்பு ! -இறுதி தீர்மானம்

பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கை குறித்த இறுதி தீர்மானம் இன்று எட்டப்படும் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய பெரும்பாலும் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவ தளபதி ஆகியோர் கலந்துரையாடி தீர்மானம் எட்டவுள்ளனர் இதனிடையே, புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள ப்ரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோவிற்கு தொடர்ந்தும் ராஜதந்திர வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என வெளிவிவகார அமைச்சு ...

Read More »

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் !

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலைவாய்ப்பு, ஊழலை  ஒழித்தல், பொதுமக்கள் பாதுகாப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல முக்கிய நகரங்களில் பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டு போலீசார் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசினர். தொடர்ந்து வன்முறை  வெடித்ததால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர். அரசின் இந்த ...

Read More »

எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போவது யார்?

8ஆவது பாரா­ளு­மன்­றத்தின் நான்­கா­வது அமர்வு எதிர்­வரும் ஜன­வரி மாதம் 3ஆம் திகதி முற்­பகல் 10 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின் பிர­காரம் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அக்­கி­ரா­சன உரை ஆற்­ற­வுள்ளார். இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆச­னத்தில் அம­ரப்­போ­வது யார் என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் மூன்­றா­வது கூட்­டத்­தொடர் தற்­போது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ பெய­ரி­டப்­பட்டு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­விற்கு எழுத்­து­மூ­ல­மான அறி­விப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இருந்த போதும் பாரா­ளு­மன்ற அமர்­வொன்று இடம்­பெற்று அதில் ...

Read More »

கட­வுச்­சீட்டு படம் எடுக்கையில் நெற்றிப் பொட்டை அகற்ற வேண்டும்!

புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை  தவிர்க்க வேண்டும் என குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக தமிழ்ப்­பெண்­க­ளி­ட­மி­ருந்து வந்த தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து  மேற்­படி திணைக்­க­ளத்­திடம் கேட்­கப்­பட்ட போதே அதன் ஊட­கப்­பேச்­சாளர் பி.ஜி.ஜி.மிலிந்த இத்­த­க­வலை வீரகேசரி வார­வெ­ளி­யீட்­டுக்­குத் ­தெரி­வித்தார்.  இது­தொ­டர்பில் அவர் கருத்­துத் ­தெ­ரி­விக்­கையில், தற்­போது சர்­வ­தேச நிய­மங்­களின் அடிப்­ப­டையில் இலங்கை கட­வுச்­சீட்டு தரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே நாம் குறித்த சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். ICAO எனப்­ப­டும்­சர்­வ­தேச சிவில் ...

Read More »