Tag Archives: ஆசிரியர்தெரிவு

ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்!

சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அகதிகள் தடுப்பு முகாமில் போராட்டம்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாகவும், அத்தோடு அதிகாரிகள் தம்மை கைதிகள் போன்று நடாத்துகின்றனர் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளதாக தெரிவருகிறது. மெல்பேர்னில் இருந்த தடுப்பு முகாம் (MIDC) சமீபத்தில் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெல்பேர்ன் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம் எனப்படும் Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அங்கிருந்த அகதிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் சுமார் ...

Read More »

வடக்கு ஆளுநர் கிளிநொச்சி விஜயம்!

புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று (10-01-2019) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர். நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ...

Read More »

எல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம்! கூட்டத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப்!

மெக்சிகோ எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக வெளியேறினார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் (570 கோடி டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் ...

Read More »

அமெரிக்கா செல்லவுள்ளார் மங்கள சமரவீர!

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தவணை அடிப்படையில் கடனை கொடுக்க தீர்மானித்த நிலையில் குறித்த கடன் வழங்குவதை  தீடீரென சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி விட்டதால் இது தொடர்காப கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நிதி அமைச்சரின் செயலாளர் ஆர்.எம்.எச். சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் நிதியமைச்சருடன் அமெரிக்கா செல்லவுள்ளனர்.   ...

Read More »

நாடாளுமன்ற மோதல் தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது!

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது. அதன்படி இந்தக் குழுவானது இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் ...

Read More »

காணாமல்போன மகனை தேடி அலைந்த தாய் மரணமான சோகம்!

இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த முல்லைத்தீவை சேர்ந்த தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார்.   முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த சண்முகராசா விஜயலட்சுமி (வயது68) என்பவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு சண்முகராசா அர்ஜின் என்ற அவரது மகன் முல்லைத்தீவு வலைஞர் மடம் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணாமல் போயிருந்தார். அன்று தொடக்கம் தனது மகனை தொடர்ந்து தேடி வந்ததோடு பல போராடடங்களிலும் கலந்துகொண்டு தனது மகனை தேடி வந்தார். மகன் காணாமல் போன நாளிலிருந்து மனதளவிலும் உடலளவிலும் ...

Read More »

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

நாசாவின் டி.இ.எஸ்.எஸ். என்ற செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் புதிய கிரகங்களை கண்டு பிடிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இந்த செயற்கை கோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. இது மிக சிறிய கிரகமாகும். இக்கிரகம் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதற்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உள்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வந்த மர்ம பொதியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஜெர்மனி, இத்தாலி, இந்தியா, ஸ்பெயின் மற்றும் கொரியா ஆகிய நாடுகளின்  தூதரக அலுவலகங்கள் மெல்போர்னில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு  தூதரகம், துணை தூதரகங்களுக்கு இன்று வந்த  மர்ம பார்சலால் பரபரப்பு  ஏற்பட்டது.  தூதரகங்களுக்கு மர்மநபர்கள் பொதியால் அனுப்பி உள்ளனர். இதை தொடர்ந்து மெல்போர்ன், கான்பெராவில் உள்ள தூதரகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அதிகாரிகள்  ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஏ.சி-யில் ஒளிந்திருந்த பாம்பு !

கொடிய விஷமுள்ள பாம்பு ஏ.சி-யில் ஒளிந்திருந்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெல்போனை சேர்ந்த டேனி மேரோக் என்பவர் தனது மனைவி டெனிஸ் உடன் தனது வீட்டுப் படுக்கையறையில் இருந்தார். அப்போது அங்கிருந்த ஏ.சி-யின் பின்புறம் சிறிய வால் ஒன்றினைக் கண்டுள்ளார்கள். அது ஒருவேளை எலியின் வாலாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியுள்ளனர். பின்பு அதன் அருகில் சென்று பார்த்த போது அவுஸ்திரேலியாவில் உள்ள கொடிய விஷப்பாம்புகளில் ஒன்றான tiger snake வகை பாம்பு எனத் தெரியவந்துள்ளது இதையடுத்து பதறிபோன தம்பதி பாம்பு பிடிப்பதில் ...

Read More »