Tag Archives: ஆசிரியர்தெரிவு

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,115 ஆக அதிகரித்துள்ளது !

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இதில் சீனாவில் மட்டும் 2,944 பேர் இறந்துள்ளதாக இந்நாட்டு தேசிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா உள்பட 70 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் இறந்து வந்த நிலையில், தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் சிறிது குறைந்துள்ளது. அதேநேரம், உலகளவில் ...

Read More »

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கை பெண்!

இலங்கை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இத்தாலியை வசித்து வரும் 46 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வௌியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த பெண் தற்போது பிராசியாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனவும் வௌியுறவு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கொவிட் 19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவராவார்.

Read More »

இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மீட்பு!

மன்னாரில் இரு இடங்களில் இராணுவத்தினரால் வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கிலோ வெடி மருந்து மற்றும் அதற்கு பயண்படுத்தும் 27 குச்சுகளும் நேற்று (02) மாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் குறித்த பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெடி மருந்து மற்றும் குச்சுகள் மன்னார் காவல் துறையிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் பள்ளிமுனை கோந்தை பிட்டி கடற்கரையோர பகுதியில் இன்று (03) ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு பரவத்தொடங்கியது வைரஸ்!

அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவுஸ்திரேலியாவில் இதுவரை 40 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ; ஒருவர் உயிரிழந்துள்ளார் எனினும் இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் நோய்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு கொரோனா வைரஸ் பரவிய இரண்டு சம்பவங்கள்பதிவாகியுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் பிரட் ஹசார்ட் இதனை உறுதி செய்துள்ளார். ஈரானிலிருந்து வருவபவர்களிற்கான தடை நடைமுறைக்கு வருவதற்கு முதல் நாள் அவுஸ்திரேலியாவிற்கு வந்த நபர் ஒருவர் கொரோன வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் கைகுலுக்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் !

கொரோனா வைரஸ் பரவி வரும் இவ்வேளையில் கைகுலுக்கிக்கொள்வதை தவிர்ப்பது புத்திசாலித்தனமாக நடவடிக்கையாக அமையும் என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்சின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நான் எனது நாளாந்த நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களை கைகுலுக்கிக்கொள்வதை நிறுத்தி விட்டு முதுகில் மெதுவாக தட்டுமாறு கேட்டுள்ளார் கைகுலுக்காமல் இருப்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார். முத்தமிடும்போது எச்சரிக்கையாகயிருங்கள் எனவும் நியுசவுத்வேல்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மனிதனிலிருந்து மனிதனிற்கு வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 68 உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லை!

நாடாளுமன்றம் இன்று (02) நள்ளிரவுடன் கலைக்கப்படுமானால் 68 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இல்லாமல் போகும். 5 வருட உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாமையின் காரணமாகவே இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வரப்பிரசாதம் இல்லாமல் போகின்றது. அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 6 உறுப்பினர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினருக்கும் இந்த வாய்ப்பு இல்லாமல் போகவுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ...

Read More »

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும்!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று (02) இரவு கலைக்கப்படும் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இன்றைய தினம் வெளியிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்ற ஆயுட்காலம் நான்கரை வருடங்களை கடந்த பின்னர் அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அதன்படி நேற்று (01) நள்ளிரவு நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவடைந்த நிலையில் ஜனாதிபதியால் எந்த வேளையிலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும். கடந்த 2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ...

Read More »

“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை”!

“நான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புகிறேன் எனக் கூறியதில்லை,” என ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த குர்து அகதியான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பூச்சானி ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்து வந்த நிலையில் பூச்சானியின் தற்போதைய கருத்து பதிலடியாக கருதப்படுகின்றது. முன்னதாக, நியூசிலாந்துக்கு வரும் தனிநபர் குறித்து தனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார் நியூ சிலாந்து பிரதமர். அதனால் அது அவர் மற்றும் அவர்களின் ...

Read More »

துபாயில் பெண்கள் மட்டும் நடத்தும் இசைக்குழு, கலையகம் – வழிகாட்டியாக ஏ.ஆர்.ரகுமான்

மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுமார் 50 பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் வழிகாட்டியாக செயல்படுவார். துபாயில் இந்த ஆண்டும் (2020) வழக்கம்போல் சர்வதேச பொருட்காட்சி நடைபெறவுள்ளது.‘சிந்தனைகளை இணைத்து, எதிர்காலத்தை படைப்போம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தொடங்கி, 10-4-2021  வரை நடைபெறும் இந்த பொருட்காட்சியை பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுமார் 50 பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து துபாய் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கும் பரவிய கொரோனா வைரஸ்: 78 வயது முதியவர் பலி!

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 78 வயது முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 80 ஆயிரம் பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்கம் ...

Read More »