கொட்டுமுரசு

மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும்!

13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டுமெனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தவிர, தங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாதென்றும் தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். அவர் நேற்று (27) ...

Read More »

இந்தியாவின் அணுவாயுத அரசியல்!

இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார். வொஷிங்டன் போஸ்ட் தகவலின் படி, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிரில் பொலிஸார் ...

Read More »

ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும்!

ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)  தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக  மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு  குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ...

Read More »

விடை தேட வேண்டிய வேளை!

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான தேர்தல் அறிக்­கை­களை (தேர்தல் விஞ்­ஞா­பனம்) தயா­ரிப்­ப­தற்கு அவ­சி­ய­மான தேர்தல் முன்­கள நிலைமை இன்னும் கனி­ய­வில்லை. ஆனால் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யி­ருப்­ப­வர்­களும், வேட்­பா­ளர்க­ளா­வ­தற்குத் தயா­ராகி வரு­ப­வர்­களும் தேர்தல் கால வாக்­கு­று­தி­களை அள்ளி வீசத் தொடங்­கி­விட்­டார்கள். அவர்­க­ளு­டைய வாக்­கு­று­தி­களில் சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன தீர்வு என்­பது குறித்து தெளி­வான உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை. அது­கு­றித்து அவர்கள் தமது அதி­கா­ர­பூர்­வ­மான தேர்தல் உறு­தி­மொ­ழிகள் தொடர்­பான அறிக்­கையில் தெளி­வாகக் கூறு­வ­தற்­காகக் காத்­தி­ருக்­கின்­றார்­களோ தெரி­ய­வில்லை. வேட்­பா­ள­ராக முத­லா­வது அறி­விக்­கப்­பட்ட பொது­ஜன பெர­மு­னவைச் சேர்ந்த கோத்தபாய ராஜ­பக் ...

Read More »

ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி; சில கேள்விகள்!

020ஆம் ஆண்டுக்குரிய  ஜனாதிபதித் தேர்தலில், மூன்றாவது அணியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தன்னை களமிறக்கியுள்ளது. ஜே.வி.பி, சில சிவில் அமைப்புகளுடன் சேர்ந்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யின் ஜனாதிபதி வேட்பாளராக, அக்கட்சியின் தலைவர் அநுர குமார திஸாயநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவிக்க, ஞாயிற்றுக்கிழமையன்று (18), காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஏராளமானோர் பங்குபற்றினர். இது, மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் இவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்துகளும் எழுகின்றன. இதன் பின்புலத்தில், சில விடயங்களைச் சொல்ல வேண்டியுள்ளது. சில கேள்விகளையும் கேட்ட ...

Read More »

சவேந்திர சில்வாவின் நியமனம் பற்றிய முரண்படும் நோக்குநிலைகள்!

கொழும்பு (நியூஸ் இன் ஏசியா) இலங்­கையின் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்த லெப்­டினன் ஜெனரல் மகேஷ் சேனா­நா­யக்க ஓய்வு பெற்­ற­தை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் அமெ­ரிக்கத் தூத­ர­கத்­தி­ட­மி­ருந்தும், ஐக்­கிய நாடு­க­ளி­ட­மி­ருந்தும் கூர்­மை­யான கருத்­துக்கள் வெளிவந்­தி­ருக்­கின்­றன. இலங்­கையில் இனத்­துவ நீதிக்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் பாத­க­மான விளை­வு­களை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்­து­மென்று அவை தெரி­வித்­துள்­ளன. பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவ அதி­காரி ஒரு­வரை இலங்கை இரா­ணு­வத்தின் தள­ப­தி­யாக நிய­மித்த செயல் இலங்­கையில் அமெ­ரிக்க இரா­ணுவ ...

Read More »

குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள்!

லங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்தாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தனது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ எனப் பெயரிட்டுள்ளது. இச்சூழலில், மக்கள் விடுதலை முன்னணியும் தனது வேட்பாளர் அநுரகுமார எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால், ஐ.தே.கவில் ...

Read More »

கட்சி அர­சி­யலே மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு தடை!

கட்சி அர­சியல் செயற்­பா­டு­களே  மலை­யக கல்வி வளர்ச்­சிக்கு   தடை­யாக இருக்­கின்­றன. அர­சியல் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி பல அதி­பர்கள் நிய­மனம் பெற்­றுள்­ளார்கள். பலர் பழி­வாங்­கப்­பட்­டுள்­ளார்கள். தற்­போதும் கூட மலை­யக கல்வி  நிகழ்­வு­களில் அர­சியல் செல்­வாக்கு காணப்­ப­டு­கின்­றது என ஓய்வு நிலை பேரா­சி­ரியர் த. தனராஜ் தெரி­வித்தார். ஒரு சமூ­கத்தின் மேம்­பாட்­டுக்கு மட்­டுமே  அர­சியல் பயன்­பட  வேண்­டுமே தவிர ஒரு சமூ­கத்தை மட்டம் தட்­டு­வ­தற்கும்,  அழிப்­ப­தற்கும், ஒடுக்­கு­வ­தற்கும்  பயன்­பட கூடாது  என்றும் அவர் தெரி­வித்தார். மலை­ய­கத்தின் சம­கால அர­சியல் ,பொரு­ளா­தார ,கல்வி நிலை­மைகள் பற்றி அவர் வீர­கே­சரி ...

Read More »

2005, 2010, 2015, 2020

நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும். பெரும்பான்மை இன சிங்கள மக்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனூடாகத் தாங்கள் ஆதரிக்கும் கட்சி, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுடன், தாங்களும் வளம் பெற வேண்டும் எனக் ...

Read More »

அதிகாரப்பரவலாக்கலுக்கான வாய்ப்புக்களை மேலும் மங்கச்செய்யும் காஷ்மீர் நிகழ்வுகள்!

கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) இந்தியாவில் சமஷ்டிமுறைக்கும்  முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட ஜம்மு — காஷ்மீர் பிராந்தியத்துக்கான அதிகாரப் பரவலாக்கத்துக்கும் நடந்திருப்பவை இலங்கையின் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருப்பவற்றையும் விட கூடுதலான அதிகாரப்பரவலாக்கலை  இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் மங்கச்செய்யக்கூடும். பலம்பொருந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமையிலான மத்திய  அரசாங்கம் ஜம்மு — காஷ்மீர் மாநிலத்துக்கு பெருமளவு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவையும் 35 ஏ பிரிவையும்  ஜனாதிபதியின் உத்தரவொன்றின் ஊடாக ஆகஸ்ட் ...

Read More »