செய்திமுரசு

அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள்- கருணா

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப் பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம்

வடக்கு மாகாண சபைக்கு இணையத்தளம் ஒன்று அங்குராப்பணம் செய்யப்படவுள்ளது. வடக்கு மாகாண சபையைப் பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன இதில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, வடக்கு மாகாணசபைப் பேரவை செயலகத்தில் நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read More »

அவுஸ்திரேலியாவின் அதர்ச தம்பதி- இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி

இந்த தலைமுறை இளைஞர்கள் செய்வதெல்லாம் காதலா என கேள்வி எழுப்பவர்களுக்கு சவுக்கடி தரும் காதல் இது. இறந்த காதலனின் விந்தணு மூலம் கருத்தரித்த காதலி. இந்த நூற்றாண்டின் சிறந்த காதலை பதிவு செய்திருக்கிறார் ஒரு பெண். தன் காதலன் இறந்த பிறகு, அவரது விந்தணு மூலம் கருத்தரித்து தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியிருக்கிறார். அவுஸ்திரேலியாவில் TOOWOOMBA பகுதியை சேர்ந்த   ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல்! ஜோசுவா டேவிஸ் – ஐலா க்ரேஸ்வெல் எல்லா காதலர்களை போலவும் பல கனவுகளுடன், தங்கள் திருமண வாழ்க்கை ...

Read More »

மக்கள் போராட்டமே அனைத்தையும் மாற்றியமைக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சி தீர்வுக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மக்கள் பலம் மட்டும் தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் சர்வதேசத்தின் நிலைப்பாட்டையும் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நேற்று(18)  பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய அரசியலமைப்புக்கான நகல் வெளியிடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு மாதங்களில் முழுமையான அரசியலமைப்பு வெளியிடப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது. அந்த அரசியலமைப்பு ஒற்றையாட்சியின் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவி மீது ஆர்வம் காட்டும் ஸ்டீவ் வாக்

அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆர்வம் காட்டி வருகிறார். கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முன்னணி அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அந்த அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அதன்பின் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 0-5 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து இரண்டு தொடர்களை ஒயிட்வாஷ் மூலம் ...

Read More »

அவுஸ்ரேலிய அணியின் புற்றுநோயாக இருந்த குழுவில் வாட்சனும் ஒருவர்- கிளார்க்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் வாட்சன் அங்கம்வகித்ததாக முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அந்த அணிக்கு கேப்டனாக திகழ்ந்த கிளார்க் அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டையொட்டி அவுஸ்ரேலியாவின் ...

Read More »

அவுஸ்ரேலிய தேசிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழி

NSW மாநில, ப்ராஸ்பெக்ட் (Prospect) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் (Hugh Mcdermott) ஹூ மெக்டெர்மாட், தேசிய பாடதிட்டத்தில் தமிழை உள்ளடக்குவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் அவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரையை நேரடியாகக் கேட்க விரும்புபவர்கள் அவரது பணிமனையை மின்னஞ்சலூடகவோ (prospect@parliament.nsw.gov.au) தொலைபேசியிலோ (02 9756 4766) தொடர்பு கொள்ளலாம்.

Read More »

தாய்லந்து-அவுஸ்ரேலியா காற்பந்து போட்டி சிங்கப்பூரில்

தாய்லந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின் மறைவைத் தொடர்ந்து தாய்லந்து காற்பந்து சங்கம், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை காற்பந்து போட்டியின் தகுதி சுற்றை ஏற்று நடத்த சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கும் தாய்லந்துக்கும் இடையிலான காற்பந்து போட்டி நவம்பர் 15-ஆம் திகதி பேங்காக்கில் உள்ள ராஜமங்கலா அரங்கில் நடைபெற இருந்தது. ஆனால் மறைந்த மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அங்கே ஓராண்டு காலம் துக்கம் அனுசரிக்கப்படுவதால் காற்பந்து போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் தகுதி சுற்றுக்கான போட்டி நடத்தப்படும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் ...

Read More »

சிட்னியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு

சிட்னி, Sir Thomas Mitchell Drive, Davidsonஇல் உள்ள வீட்டினுள்ளிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பிய பின்னணி கொண்ட 44 வயதான ஆண், 43 வயதான பெண், 9 வயதுச் சிறுவன் மற்றும் 10 வயதுச் சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக The Daily Telegraph  செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நால்வருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து இவர்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் காவல்துறைக்கு அறிவித்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை அந்த வீட்டிலிருந்த நாயும் உயிரிழந்து காணப்பட்டதாக ...

Read More »

‘என்னை சுட்டுக்கொல்ல போகின்றீர்களா?’ -சுமந்திரன்

நேற்று (16) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கு தெளிவுபடுத்த முற்றட்ட தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரன் அவர்களும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தெளிவுபடுத்த முற்பட்டபோதே கடுமையான வாக்குவாதம் மக்களுக்கும் சுமந்திரனுக்குமிடையில் இடம்பெற்றது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “முடியும் என்றால் பதிலளிப்போம் அதில் நாம் என்ன சொல்லப்போகின்றோம் என நீங்கள் சொல்லமுடியாது என்றும் சொல்லக்கூடிய கேள்விக்கு பதில்சொல்வோம் என்றும் கூறினார். மக்கள் கேள்விகளை கேட்டபோது அதனை தடுப்பதற்காகவும் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதில் கலந்துகொண்ட சுமந்திரன் சர்வதேச ...

Read More »