செய்திமுரசு

வீரம் விளைந்த வல்வெட்டித்துறை வானில் வித்தியாசமான பட்டங்கள் பறந்தன

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்று(14) மாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்றுமாலை நடந்த இந்தப் பட்டப் போட்டியில், பெருமளவு இளைஞர்களும் சிறுவர்களும், பங்கேற்று, தாம் தயாரித்த பட்டங்களை பறக்கவிட்டனர். இந்தப் பட்டப்போட்டியைக் காண, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலானோர் வல்வெட்டித்துறையில் ஒன்று கூடியிருந்தனர்.

Read More »

கழுத்து பகுதிக்கு கீழ் இயக்கம் இல்லாத இலங்கை இளைஞன் சாதனை

அவுஸ்ரேலிய ஊடகங்கங்களின் பிரபலியமாக  மாறி உள்ளார் இலங்கையரான பி.தினேஸ். இவர் பிரிஸ்பேன் பல்கலைக்கழகத்தில் பயின்று வைத்திய கலாநிதியாக வெளியேறி உள்ளார். ஆயினும் இவரின் கதை வேறு. இவர் மூன்றாம் வருடம் படித்து கொண்டிருந்தபோது பாரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இதனால் இவரின் நெஞ்சு பகுதிக்கு கீழ் எந்தவொரு இயக்கமும் இல்லை. இருப்பினும் பல சவால்களை முறியடித்து தொடர்ந்து படித்து வைத்தியராகி உள்ளார். இவரின் மகத்தான சாதனை ஏனையோருக்கு முன்னுதாரணமாகி உள்ளன.

Read More »

அவுஸ்ரேலியா ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச் புதிய வரலாறு படைப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். டென்னிஸ் போட்டியில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்சிலாம் போட்டிகளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் நடைபெறும். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாமான அவுஸ்ரேலிய  ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதிவரை ...

Read More »

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது!

ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி ...

Read More »

இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கப்டன் பதிலடி

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவுஸ்ரேலிய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 0-3 என தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் சரியாக விளையாடாத பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வந்து விளையாட ...

Read More »

இந்தியாவிற்கு எதிராக அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம்: லயன்

இந்தியாவிற்கு எதிராக நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா மோசமாக விளையாடலாம் என லயன் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியா வருகிறது. முதல் போட்டி பிப்ரவரி 23-ந்திகதி புனேவில் தொடங்குகிறது. 2-வது போட்டி பெங்களூருவில் மார்ச் 4-ந்திகதி முதல் 8-ந்திகதி வரையும், 3-வது டெஸ்ட் ராஞ்சியில் மார்ச் 16-ந்திகதி முதல் 20-ந்தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 25-ந்திகதி முதல் 29-ந்திகதி வரை தரம்சாலாவிலும் ...

Read More »

லஹிரு எவ்வாறு உயிரிழந்தார்? – சஷி வீரவன்ச சாட்சியம்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி பிரசாத் அல்விஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது அங்கு மரண விசாரணையின் ஆரம்ப சாட்சி சஷி வீரவன்ச சாட்சியம் வழங்கினார். அவர் நீதிமன்றில் குறிப்பிட்டதாவது, “உயிரிழந்த லஹிரு எனது மகனின் நல்ல நண்பர். சில காலங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். பல நாட்கள் மகனுடன் இரவில் எங்கள் வீட்டில் தங்குவார்கள். அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற ...

Read More »

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 78 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த அவுஸ்ரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்னிலும், கேப்டன் சுமித் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கிறிஸ்லீன் (16), ஹேட் (39), மிஷ்சேல் மார்ஷ் (4) ஆகியோர் ...

Read More »

சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள்!

சிறீலங்கா பொலிஸ் சேவைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை, சித்திரவதை மற்றும் ஏனைய சட்ட விரோத நடவடிக்கைகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, இரகசியப் பொலிஸாருக்கு எதிராகவும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இரகசியப் பொலிஸார் சித்திரவதை முகாம் போன்று செயற்படுவதாகவும் அம்முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நான்காவது மாடி என அறிமுகமாகியுள்ள இரகசியப் பொலிஸ் பிரிவில், சித்திரவதை வழங்கப்படுவதாகவும், அதற்கான சாட்சிகள் பல உள்ளதாகவும் ...

Read More »

ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு

அவுஸ்ரேலியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியா நாட்டின் மூவி வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்தனர். சங்கிலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் திடீரென நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரின் உள்ளே 20 பேரும் சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர். ...

Read More »