செய்திமுரசு

அவுஸ்ரேலியா ஓபன் டென்னிஸ்: செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்ரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 6-ம் நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டை சேர்ந்த நிகோல் ஜிப்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ...

Read More »

நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்படும்!

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைத்தால் மட்டுமே சமாதானமும் நல்லிணக்கத்தினையும்ஏற்படுத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகரிடம் வடமாகாணமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் உயர்ஸ்தானிகர் போல் மற்றும் அவரது பிரதிநிதிகள்இன்று வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில்அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு முதமைச்சர் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணமக்களுக்கு எவ்வாறான உதவிகளை செய்ய முடியுமென கேள்வி எழுப்பியிருந்தார்கள். போரினால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தினைஉயர்த்தும் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். இதில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வான்டேவங்ஹியை எதிர் கொள்கிறார். வான்டேவங்ஹி ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: சானியா உள்ளே, போபண்ணா வெளியே

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா 2ம் சுற்றில் தோல்வியடைந்தார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு இன்று வெற்றியும் தோல்வியும் கலந்த நாளாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)- ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சமந்தா (அவுஸ்ரேலிய )- ஷூய் ஜாங் (சீனா) ஜோடியை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ...

Read More »

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக அவுஸ்ரேலியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை

நெடுந்தாரகையின் முதல்ப் பயண நிகழ்விற்காக நாளைய தினம் அவுஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோருடன் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளின் உதவியுடன் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் போக்குவரத்திற்காக 150 மில்லியனில் இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்தினில் 80 இருக்கைகள் வசதியுடன் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட படகிற்கான மாலுமிகளிற்காகவும் நெடுந்தீவு இளைஞர்களில் ஐவரிற்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக பயிற்சி வழங்கப்பட்டு ...

Read More »

கரோலினா, ஜோகன்னா 3-வது சுற்றுக்கு தகுதி!

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா, ஜோகன்னா ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா கோன்டா 2-வது சுற்றில் நமோமி ஒசாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். இதில் ஜோகன்னா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 17-வது ...

Read More »

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளி பிடிபட்டார்!

கடந்த 2009ம் ஆண்டு சிட்னி North Epping-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கில் கொலையாளி எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. ஜுலை 09 2009 அன்று தமது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த Min Lin  உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் காலை அந்த வீட்டுக்குச் சென்ற Min Lin -இன் சகோதரி Kathy Lin இக்கொலைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துவருகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான பெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த ப்ளோரியன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சீக்கிய மாணவனுக்கு அநீதி!

அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் ...

Read More »

கோத்தபாயவுக்கு அவுஸ்ரேலியாவில் நெருக்கடி!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என அவுஸ்ரேலியாவில் உள்ள லசந்த விக்ரமதுங்கவின் மகள் வாக்குமூலமளித்துள்ளார். கொலை இடம்பெற சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தை தன்னிடம் தெரிவித்த விடயங்களை வெளிப்படுத்தியே அவுஸ்திரேலியாவில் வைத்து அவர் இவ்வாறு தமது விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டி சில்வா கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ...

Read More »