செய்திமுரசு

தேர்தலில் போட்டியிடுவதற்கு காரணம் இதுதான்!

தெற்கு அவுஸ்ரேலிய மாநில தேர்தலில் நிக் செனாஃபோன் அணித் தலைவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கிழக்கு அடிலெய்டின் ஹார்ட்லி தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; ஒரு ஒக்ஸிஜன் தொட்டி இல்லாமல் எவரெஸ்ட் மலை மேல் ஏறுவதைப் போன்று இந்தத் தேர்தல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார். அத்துடன் தனது சொந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மக்கள் தொகை தொடர்ந்த்தும் குறைந்து வரும் நிலையே இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு தூண்டியது என்றார். ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர்.

Read More »

அவுஸ்ரேலியாவில் கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அவுஸ்ரேலி ய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஜொலிக்கும் வித விதமான பூக்கள்!

அவுஸ்ரேலியாவில் குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் தொடங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அவுஸ்திரேலிய அரசு ஆண்டு தோறும் மிகவும் அழகான பூந்தோட்டங்களை உருவாக்கி வித விதமான பூக்களை மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் அவுஸ்திரேலிய தலைநகரமான காம்பராவில் மக்கள் பார்ப்பதற்காக பல லட்சக்கணக்கான பூ மரங்களை நாட்டி உள்ளார்கள். இந்த நிகழ்வு கடந்த மாதம் 16 ஆம் திகதியில் இருந்து இந்தமாதம் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அவுஸ்திரேலியாவின் ...

Read More »

சிறிலங்காவுக்கு எம்மால் சடலத்தைக் கொண்டுவரமுடியாது – அவுஸ்ரேலியா

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்கு கொண்டுசெல்வதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதனை பப்புவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ளவேண்டுமெனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்குக் கொண்டுவருவதற்கு 9ஆயிரம் அவுஸ்ரேலிய டொலரை வழங்குமாறு அவுஸ்ரேலிய தூதரகம் கோரியிருந்ததாக அவரது உறவினரான மதி என்பவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அவுஸ்ரேலிய ஊடகம், மனுஸ் தீவில் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் ...

Read More »

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம்: மிட்செல்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஜான்சனை போல் தாக்குதல் பந்து வீச்சை கையாள்வோம் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 23-ம் திகதி பிரிஸ்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு தற்போது அவுஸ்ரேலிய வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதிலும் முக்கியமாக வேகப் பந்து வீச்சாளர்கள் முழு அளவில் தங்களை பட்டைத் தீட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் உள்ளூரில் நடைபெறும் தொடர்களில் பங்கேற்றுள்ளனர். ...

Read More »

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் உயிரிழந்த யாழ் இளைஞன்! -கண்டனங்கள்

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளின் உயிரிழப்பினைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த 32 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Read More »

புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்!

தாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய அரசு மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டுமென வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 2013 இல் அகதியாக அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அடைக்கலம் புகுந்த நிலையில் பப்புவா-நியுகினியா நாட்டிற்குச் சொந்தமான மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான ரஜீவ் ராஜேந்திரன் (வயது-32) என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை குறித்து ...

Read More »

மனுஸ் தீவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை ஒப்படைக்க 9ஆயிரம் டொலர் கேட்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம்!

மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழ் இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு 9ஆயிரம் டொலரை அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளதாக குறித்த இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளனர். மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2013ஆம் அண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் புகுந்த இவர் மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு தனது உடலுக்கு தானே தீங்கிளைக்க முற்பட்டவேளையில் உளவளச் சிகிச்சைக்காக மனுஸ்தீவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அவர் தனது ...

Read More »

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, இதனுடன் ...

Read More »