அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளின் உயிரிழப்பினைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த 32 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.