அவுஸ்ரேலியாவில் ஜொலிக்கும் வித விதமான பூக்கள்!

அவுஸ்ரேலியாவில் குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் தொடங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அவுஸ்திரேலிய அரசு ஆண்டு தோறும் மிகவும் அழகான பூந்தோட்டங்களை உருவாக்கி வித விதமான பூக்களை மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

அந்த வகையில் இந்த வருடமும் அவுஸ்திரேலிய தலைநகரமான காம்பராவில் மக்கள் பார்ப்பதற்காக பல லட்சக்கணக்கான பூ மரங்களை நாட்டி உள்ளார்கள்.

இந்த நிகழ்வு கடந்த மாதம் 16 ஆம் திகதியில் இருந்து இந்தமாதம் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அவுஸ்திரேலியாவின் தலை நகரை சுற்றிப்பார்ப்பதுடன் இந்த பூங்காவையும் வலம் வருகின்றனர்.

இந்த நிகழ்வானது கொமன்வெல்த் பாக் காம்பரா என்னும் இடத்தில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்காவுக்கள் பிரவேசிக்கும் மக்களை மேலும் மகிழ்விக்க இன்னிசை நிகழ்ச்சிகள் கண்கவர் மின்விளக்குகள் என பலவகை அம்சங்களை அவுஸ்திரேலிய அரசு அங்கே வடிவமைத்து உள்ளது.

c7d3a22b1953994f01603601f08063ac