செய்திமுரசு

அவுஸ்திரேலிய கட்சியின் தலைமைக்கு இலங்கை வம்சாவளிப் பெண் நியமனம்

அவுஸ்திரேலியாவின் முன்னணி அரசியல் கட்சிகளுள் ஒன்றான ‘கிறீன்ஸ்’ கட்சியின் விக்டோரியா பிராந்திய தலைவராக இலங்கை வம்சாவளிப் பெண்ணான சமந்தா ரட்ணம் அறிவிக்கப்பட்டுள்ளார். மோர்லண்டின் முன்னாள் மேயராகப் பதவி வகித்த சமந்தா ரட்ணம், நாளை (13) உத்தியோகபூர்வமாகத் தனது பதவியை ஏற்கவுள்ளார். மேற்படி தலைமைப் பதவியில் இருந்த முன்னாள் தலைவர் கிறெக் பார்பர் பதவி விலகியதையடுத்தே அப்பதவிக்கு சமந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

அவுஸ்ரேலியா- ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அங்கீகாரம்!

அவுஸ்ரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி அளிப்பதற்கு வகைசெய்யும் பொது வாக்கெடுப்பில் அந்நாட்டில் உள்ள 62.5 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர். ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட பாதுகாப்பு வழங்கினாலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இவ்வகை திருமணத்தை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கான தபால் வாக்கெடுப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த தேர்தலில் 62.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் புள்ளியல் துறை ...

Read More »

அவுஸ்ரேலிய இளம் பெண்கள் குறித்த ஆய்வு!

அவுஸ்திரேலிய இளம் பெண்களில், 98 சதவிகிதத்தினர் பாலின சமத்துவமின்மையை உணர்கின்றனர் என ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இதேவேளை சுமார் 1700 க்கும் அதிகமான அவுஸ்திரேலியா இளம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது, அவர்களது வாழ்க்கையின் பெரும்பாலான அம்சங்களில் இளம் ஆண்களுக்கு சமமான முறையில் தாம் நடத்தப்படவில்லையென அவர்கள் உணர்ந்துள்ளதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 10 முதல் 17 வயது வரையான பெண்களிடம் இந்த ஆய்வினை Plan International Australia எனும் அமைப்பு நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஸ்டோக்சை சீண்டுவதற்கு தயாராகுங்கள்!

பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தால் ரசிகர்கள் அவரை சீண்ட வேண்டும் என்று அவுஸ்ரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 28-ந்தேதி முதல்  அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சர்ச்சையால் ஆஷஸ் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்த வழக்கு காவல் துறை  விசாரணையில் இருப்பதால் பென் ...

Read More »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசி தாக்குதல்

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ...

Read More »

சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார். இதனையடுத்து மனுமீதான விசாரணையை, ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இன்று மோதல்!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் ...

Read More »

அவுஸ்ரேலிய ஜூனியர் அணியில் நிறவெறி!

பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் நிறவெறி விமர்சனங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்து இளம் வயதில் அவுஸ்ரேலிய சென்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் 30 வயதான பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா பிளேயர்ஸ் வாய்ஸ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- சிட்னியில் இளம் வீரராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் நிறவெறித்தனமான இழிவுபடுத்தல்களை சந்தித்து இருக்கிறேன். இதனால் அவுஸ்ரேலிய அணியை ஆதரிக்க முடியாத அளவுக்கு ...

Read More »

50 வயது வரை விளையாட விரும்புகிறேன்: அவுஸ்ரேலிய வீரர்

அவுஸ்ரேலியாவின் இடது கை ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், 50 வயது வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் ‘சைனமேன்’ பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கியவர். தற்போது 46 வயதாகும் இவர், அவுஸ்ரேலிய சர்வதேச அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த ...

Read More »

வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே வெற்றியாகிவிடும்: குல்தீப் யாதவ்

அவுஸ்ரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே செய்ததில் 50 சதவீதம் செய்தாலே எனது கிரிக்கெட் வாழ்க்கை வெற்றியாகி விடும் என குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அக்சார் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மூவரும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மணிக்கட்டை திருப்பி பந்து வீசும் ‘விரிஸ்ட் பவுலர்’ என அழைக்கப்படும் குல்தீப் யாதவ் தனது அபார ...

Read More »