செய்திமுரசு

அவுஸ்ரேலியா: சுறாவின் பிடியிலிருந்து உயிர்பிழைத்த சிறுவன்!

அவுஸ்ரேலியக் கரையோரம்15 வயது சாரா வில்லியம்ஸ் (Sarah Williams) சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கியது. தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரின் அருகில் சம்பவம் நடந்தது. சுறா தாக்கியதில் சாரா படகிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தையும் சகோதரனும் உதவிக்கு விரைந்தனர். சாராவைப் படகில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் சென்றபோது படகைச் சுறா சுமார் 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வட்டமிட்டது. படகின் நீளம் நாலரை மீட்டர் நீளம். சுறாவும் அதே நீளத்தைக் கொண்டிருந்தது. சிறு காயத்துடன் உயிர்தப்பிய ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக ஜுலி பிசப் நியமனம்!

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல் வௌிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜுலி பிசப் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

Read More »

அவுஸ்திரேலிய அரசியலில் அதிரடி மாற்றம்!

அவுஸ்திரேலியக் குடியுரிமை எனும் ஒற்றைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்ரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்டர்கள் என்று மொத்தம் ஏழு பேர் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றது செல்லாது என்று பிரச்சனை எழுந்தது. இந்த சட்ட சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்று அரசு, நாட்டின் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அவுஸ்ரேலிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்ட சிக்கலை உயர் நீதிமன்றம் ஆராய்ந்தது. இரட்டைக் குடியுரிமை கொண்ட ஏழுபேரில் ஐந்து பேரின் ...

Read More »

வீழ்ச்சியடைகிறதா அவுஸ்ரேலிய டொலர்?

சுமார் 80 அமெரிக்க சத பெறுமதியாகவிருந்த அவுஸ்ரேலிய டொலர், கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. பிரித்தானிய (2%), யூரோ (1.3%) ஜப்பானிய (1.1%), ஏன் நியூசீலாந்து (0.6%) பண மாற்ற தொகையும் நேற்று முன்தினம் வீழ்ந்திருந்தாலும், நேற்றிரவு அமெரிக்க பணத்தைவிட மற்றைய பணமாற்ற விகிதங்கள் திடமாகியுள்ளன. Consumer Price Index (CPI) என்று சொல்லப்படும் நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்குக் கொடுக்கும் விலை அவுஸ்திரேலியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என தெரியவருகிறது. இதேவேளை அவுஸ்ரேலிய மத்திய ...

Read More »

யாழில் குழந்தைகளுக்கு நஞ்சு ஊட்டி தானும் தற்கொலை செய்த தாய்!

1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் கணவன்  நஞ்சு  குடித்து தற்கொலை செய்திருந்த நிலையில் அக் குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர்   நஞ்சு  குடித்து நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உட்பட சிறிய தாயாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தானும் மருந்தினைக் குடித்து தனது குழந்தைகளுக்கும் பருக்கித் தாயும் பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். யாழ்.அரியாலை ஏ.வி.வீதியில் உள்ள ...

Read More »

உலக சாதனையை முறியடித்தார் அவுஸ்ரேலிய வீராங்கனை!

அடிலெய்ட் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய நீச்சல் போட்டியில் (Australian Short Course Swimming Championships) Cate Campbell கலந்து கொண்டார். நூறு மீட்டர் நீச்சல் போட்டியில் 50.25 செக்கனில் நீந்தி முடித்து உலக சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர், சுவீடன் நாட்டின் Sarah Sjostrom, 100 மீட்டர் நீச்சலில் தக்க வைத்திருந்த உலக சாதனை 50.58 செக்கன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இரட்டை குடியுரிமையுடன் தேர்தலில் போட்டி! அவுஸ்ரேலிய துணை பிரதமர் பதவி நீக்கம்

அவுஸ்ரேலிய துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்து தேர்தலில் போட்டியிட்ட காரணத்திற்காக அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவுஸ்ரேலிய அரசின் துணை பிரதமராக பதவிவகித்து வருபவர் பார்னாபை ஜோய்ஸ். நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள இவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றதாக வழக்கு தொடரப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டப்படி இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜோய்ஸ் மட்டுமல்லாமல் இதே குற்றச்சாட்டின் கீழ் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆஸ்திரேலிய ...

Read More »

அன்பாக வளர்த்த எசமானியை கடித்துக்குதறிக் கொலை செய்த நாய்!

அவுஸ்திரேலியாவின் கான்பரா நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, அவர் ஆசையோடு வளர்த்த நாய் ஒன்று கடித்துக் குதறியுள்ளது. இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கான்பரா நகரைச் சேர்ந்த Tania Klemke எனும் நாற்பது வயதுடைய பெண் சிம்பா எனும் பெயெருடைய நாய் ஒன்றினை மிகுந்த செல்லமாக வளர்த்துவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் அவரது வீட்டுக்கு வருகை ...

Read More »

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு!

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டுடி மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும். சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின்கடவுச்சீட்டுக்கள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்தகடவுச்சீட்டுக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டு மூலம் 159 நாடுகளுக்கு ...

Read More »

மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் துன்புறுத்தல்!

பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது. இந்த நிலையில் முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ...

Read More »