செய்திமுரசு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் இன்று தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லெண்ட் 2001-ம் ஆண்டு முதல் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்து வந்தார். இது தொடர்பாக சதர்லெண்ட் கூறியதாவது:- 20 ஆண்டு காலமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். ...

Read More »

கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு பணியில் கூர்க்கா வீரர்கள்!

சிங்கப்பூரில் வருகிற 12-ந்திகதி அமெரிக்கா – வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர். இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம். மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது. அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர். ...

Read More »

அலோசியஸிடம் பணம் பெற்றவர்களின் பட்டியல் கையளிப்பு!

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் சபாநாயக ர் கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று கையளித்துள்ளார். அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வௌியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

காணாமல்போனவர்களின் விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில்!

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டு விசாரணைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசியமான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் மாத்தறை முல்லைத்தீவு மாவட்டங்களில் காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தாக தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் எதிர்வரும் 13 ம் திகதி திருகோணமலையில் காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் அமர்வு இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான ஆணையாளர்களை ஜனாதிபதி ...

Read More »

டிரம்ப் – கிம் சிங்கப்பூர் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு சிங்கப்பூரில் வருகிற 12-ம்திகதி காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார். வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய கோடீசுவரர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது கோடீசுவரர் அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில் மரணம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில் தமது சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்கு தானமாக வழங்க விரும்பிய அலி பானட், உடனடியாக அதற்கான பணியிலும் ...

Read More »

சிறிலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளருக்கு ஊடகச் சந்திப்புகளுக்கு தடை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. “இராணுவ அதிகாரி ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும், இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்” அந்த வகையில், சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ள இராணுவத் ...

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர் காணி வலி வடக்கில் விடுவிப்பு!

வலி. வடக்கில் காங்கேசன்துறை பகுதியில் படையினரின் ஆக்கிரப்பில் இருத்து மேலும் 34 ஏக்கர் நிலம் நாளைய தினம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படவுள்ளது. வலி. வடக்கில் காங்கேசன்துறை வீதி கடற்கரையோரம் வரை முழுமையாக விடுவிக்கப்பட்டபோதும் வீதியின் ஒரு பக்கத்தில் குடியிருப்புக்களை ஆக்கிரமித்து பெரிய இராணுவ முகாம்கள் தற்போதும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் இராணுவ முகாமில் இருந்து 34 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் பலாலி இராணுவ முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதி நிலங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. குறித்த 34 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படும் பட்சத்தில் ...

Read More »

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ...

Read More »

என்னால் மரணத்தின் வாசனையை உணரமுடியும்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏரி கேலா எனும் பெண் உளவியலாளர், தன்னிடம் ஒரு வித்தியாசமான சக்தி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். 24 வயதே ஆன இவர் தற்போது உளவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் கூறும் போது தன்னால் ஒருவருக்கு மரணம் நிகழப்போகிறது என்பதை, முன்கூட்டியே கணிக்க முடியும் என கூறுகிறார். அவரது கணிப்பு பலமுறை அப்படியே நடந்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கும் கேலா, முதல் முறையாக இந்த விஷயத்தை கண்டுவிடித்தது, தனது 12வது வயதில் தானாம். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்ற கேலா ...

Read More »