செய்திமுரசு

விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருகின்றாரா?

எதிர்காலத்தில் அரசியலுக்கு நல்ல தலைவர்கள் வருவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட குடும்பத்தின் நன்கு படித்த தலைவர் ஒரு புதிய அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “நீங்கள் விமுக்தி குமாரதுங்க அரசியலுக்கு வருவதற்கு வழி வகுக்க முயற்சிக்கிறீர்களா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், “யாரோ ஒருவராக இருப்பார், நான் அதைச் சொல்லவிரும்பவில்லை, அது விமுக்தி குமாரதுங்கவா அல்லது அந்தப் பெயரா ...

Read More »

’என் சாவுக்கு காரணம்’

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (03) தெரிவித்தார். ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த அந்த ...

Read More »

பெண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் 22-வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. முதல் கால் பகுதி (15 நிமிடம்) ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார். இதனால் ...

Read More »

நெருக்கடியுடன் விளையாடுதல்

நான் ஒரு பொருளாதார நிபுணரோ அல்லது நிதிவிவகார நிபுணரோ அல்ல, ஆனால் இலங்கை அரசின் இயக்கவியலையும் அதன் சமூக-அரசியல் முறைமையையும் கவனமாகப் பின்பற்றிய ஒரு அரசியல் ஆய்வாளர் மற்றும் ஒரு விமர்சகர் என்ற முறையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி செல்கிறதெ ன்று என்னால்எதிர்வுகூற முடிந்தது. பல நேர்காணல்கள் மற்றும் கலந்துரையாடல்களில், நாடு வங்குரோத் தாகி விட்டதாக இரவு தூக்கத்திற்குப் பிறகு அவர்கள் காலையில் எழுந்தவுடன் நாடு வங்குரோத் தாகி விட்டதாககேட்டு ஆச்சரியப்படக்கூடாது என்று நான் எனது பார்வையாளர்களை எச்சரித்திருந்தேன். ...

Read More »

இந்தப் படத்தில் எத்தனைப் பூச்சிகள் இருக்கின்றன?

பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா ஒன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும் பூச்சிகளைப் பார்வையாளர்கள் கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எதையாவது கண்டுபிடிப்பது என்றால் யாருக்குத் தான் ஆர்வம் வராது. வாருங்கள் தாவரங்களின் இலைகள் மற்றும் மரக் கிளைகளுக்குள் மறைந்திருக்கும் பூச்சிகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இதற்கு அவர்கள் கொடுத்த நேரம் ஏழு வினாடிகளே ஆகும். பார்வையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ...

Read More »

‘கிண்ணியாவில் எல்லைகள் ஒடுங்கும் அபாயம்’

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார். கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று (02) கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “கிண்ணியா பிரதேசம் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பகுதியாகும். திருகோணமலை மாவட்டத்தில் சனஅடர்த்தி கூடிய பகுதியாகவும் கிண்ணியா காணப்படுகிறது. இதன் எல்லையைக் குறைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “இதுவரைக்கும் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட எல்லைகள் சரிவர இடப்படாத காரணத்தால், ...

Read More »

துமிந்தவின் பொது மன்னிப்பை சவாலுக்குட்படுத்தி மனு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மூலம், பிரிவு 12 (1) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டத்தின் சமமான பாதுகாப்புக்காக என்ற தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர் ...

Read More »

அரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை!

கேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறுவியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது 80 வயதை நிறைவுசெய்ததையொட்டி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உரையாடியதிலிருந்து… கலை எப்போதாவது உங்களுக்கு ஆறுதலாக ...

Read More »

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை ...

Read More »

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் ...

Read More »