செய்திமுரசு

அமெரிக்க அமைச்சரின் அணுகுமுறை வருத்தமளிக்கிறது! – வடகொரியா

அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நிர்பந்திக்க வந்திருந்த அமெரிக்க மந்திரியின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி நேற்று பியாங்யாங் வந்திருந்தார். சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது. வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் ...

Read More »

மஹிந்தாவின் 112 கோடி விவகாரம் : நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோரி கடிதம்!

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா நிதி வழங்கியமை தொடர்பாக வெளியிட்ட செய்தியின் மூலங்களை தருமாறு நியூயோர்க் ...

Read More »

விஜயகலாவை விசாரிக்க ஒழுக்காற்று குழு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரன் அண்மையில் விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் கொண்ட ஒழுக்காற்று விசாரணை குழுவை ஐக்கிய தேசிய கட்சி நியமித்துள்ளதாக கட்சியின் தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் விஜயகலா மகேஷ்வரன் யாழ்பாணத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்தினை முன்வைத்திருந்தார்.அது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகின. அது மாத்திரமன்றி அரசியலமைப்பிற்கு முரணான ...

Read More »

இந்திய ஆக்கி அணிக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவானின் அறிவுரை!

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி, கடந்த முறை போலவே அதே ஆஸ்திரேலிய அணியிடம் அதே ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் வீழ்ந்திருக்கிறது. இந்திய அணிக்கு இத்தொடரில் சில மகிழ்வூட்டும் விஷயங்களும் நடந்தன. அதாவது, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது, பரம வைரி பாகிஸ்தானை துவைத்தெடுத்தது, தர வரிசையில் உயர்ந்த பெல்ஜியத்துடன் சமன் செய்தது… போன்றவை. மீண்டும் ஒருமுறை இந்தியா கடைசிக்கட்டத்தில்தான் போராடி வீழ்ந்திருக்கிறது. நம்முடைய பலம், பலவீனத்தை நம்மை விட நம் எதிரி நன்றாக அறிவார் அல்லவா? இந்தியாவின் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கார்களின் டயர்களை பதம்பார்த்த “உருகும் சாலை”

சாலையில் போடப்பட்டுள்ள கட்டித்தார் உருகி, வாகனங்களின் டயர்களில் ஒட்டியதால், ஆஸ்திரேலிய வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனங்களை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குயின்ஸ்லாந்திலுள்ள 50-க்கு மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இது தொடர்பாக இழப்பீடு வழங்கப்படலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. “இதுபோல நான் இதுவரை பார்த்ததில்லை. நேற்று இது பற்றிய தகவல்கள் வர தொடங்கியவுடன் நம்ப முடியவில்லை” என்று உள்ளூர் மேயரான ஜோ பரோனல்லா பிபிசியிடம் தெரிவித்தார். வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நிகழந்துள்ள இந்த சம்பவத்தால், கடந்த வாரம் தார் போடப்பட்ட சாலை சேதமடைந்துள்ளது. பல ...

Read More »

‘நாங்கள் நலமாக உள்ளோம் ஆனா ரொம்ப குளிருது!- தாய்லாந்தின் குகையில் இருந்து சிறுவர்கள்

தாய்லாந்தில் நீர் தேங்கியிருக்கும் குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கு நீரில் மூழ்க தெரியாது என்பதால் ஓர் இரவில் அவர்களை மீட்டுவிட முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் தம் லுவாங் குகையின் ஒரு பகுதியில், ஏறக்குறைய இரண்டு வாரங்களாக சிக்கியிருக்கும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.உயிருடன் இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த 2 நீர் மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து ...

Read More »

ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி?

இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது. அதன் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது. அம்பாந்தோட்டைத் ...

Read More »

குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் பலி!

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். குகையில் சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் என்ற கடற்படை வீரர் பலியானதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மா சே நகரில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. இந்தக் குகை 10 கி.மீ. நீளம் உடையதாகும். கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயதுவரை உடைய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கை அறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை 68 வயது தந்தை ஒருவர் சுட்டுக் கொன்றிருந்தார். அத்துடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றது. இந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் ...

Read More »

“அன்று மக்களுக்காக உயிர் துறந்தவர் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தவர் விஐயகலா“!

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தவிஐயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இந்த உரைக்கு தெற்கிலிருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில். நாடாளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. அத்தோடு விஐயகலாவின் உரை குறித்தான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பிரதமர் ரணிலையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந் நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதனையடுதே அவருக்கு ஆதரவாக குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ...

Read More »