அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிட்னி Pennant Hills பகுதியில் தமது படுக்கை அறைகளிலிருந்த 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளை 68 வயது தந்தை ஒருவர் சுட்டுக் கொன்றிருந்தார்.

அத்துடன் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரைத் தேடும் பணி பல மணிநேரங்களாக இடம்பெற்றது.

இந்த நிலையில் இன்று Normanhurst பகுதியில் அவரது சடலம் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சடலத்துக்கு அருகில் இரண்டு கைத்துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளது.

அந்தக் கைத் துப்பாக்கிகள் தனது பிள்ளைகளைக் கொல்ல பயன்படுத்தியுள்ளார் என்று கூறிய காவல் துறையினர், இக்கொலைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் தாக்குதல்தாரி அவரது பெயரில் இரு கைத்துப்பாக்கிகளையும் சட்டரீதியாக வாங்கியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் எவ்வித குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான எவ்வித ஆதாரங்களோ அல்லது குடும்ப வன்முறைக்கெதிரான தடையுத்தரவோ இல்லையென காவல் துறையினர் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரு பிள்ளைகளுடனும் தாயாருடனும் குறித்த நபர் வாழ்ந்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரே நேரத்தில் தனது இரு பிள்ளைகளையும் இழந்த தாய் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.