செய்திமுரசு

20வது அரசியலமைப்பு திருத்தம் முன்வரைவு அடுத்தவாரம்!

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான முன்வரைவு அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இந்த முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த முன்வரைவினை நாடாளுமன்ற பொது செயலாளரிடம் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் அமைப்பின் பிரகாரம் அது முன்மொழியப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதனிடையே, 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான கருத்து கணிப்பை நடத்துவதற்கு அண்ணளவாக 4 மாதங்கள் தேவைப்படும் என, ஜேவியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! “காக்கா அண்ணன்” மௌன விரதம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் இச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத் தக்கது. நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ...

Read More »

நாடுகடத்தப்படும் நிலையில் உள்ள குடும்பத்திற்கு ஆதரவாக 1 லட்சம் கையெழுத்துக்கள்!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலையில் நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ளனர். இந்நிலையில் குறித்த குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்த வேண்டாமெனக் கோரி ஏறக்குறைய 1 லட்சம் கையெழுத்துக்கள் உள்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை நடேசலிங்கம் – பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகள் பல காலமாக Biloela-வில் வாழ்ந்து வந்தனர். அவர்களது Bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்ததை அடுத்து, அவர்கள் நாடு கடத்தப்படும் நோக்கில் ...

Read More »

ரூ.5 கோடி செலவில் இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்!

5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெறும் இளவரசர் ஹாரி-மேகன் திருமண விழாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதி யின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் திருமணம் நடக்கிறது. திருமணத்தை யொட்டி கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரச குடும்ப திருமணத்தை யொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹாரி-மேகன் ...

Read More »

அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான தேர்வில் நடந்த தவறு!

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவதற்காக நடாத்தப்படும் தேர்வில் பிழை இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. குடியுரிமைக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும். இந்த நிலையில் அவ்வாறான ஒரு கேள்வியில் கொடுக்கப்பட்ட பதில்கள் அனைத்தும் தவறானவை என இந்த வாரம் தேர்வு எழுதிய பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியானது, அவுஸ்திரேலியாவின் மொத்த சனத்தொகை எவ்வளவு என்பதுதான். இதற்குரிய பதில்களாக 18 மில்லியன், 22 மில்லியன் மற்றும் 30 மில்லியன் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவின் ...

Read More »

அமெரிக்காவின் புதிய சிஐஏ இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமனம்!

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹேஸ்பெல் நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ. இயக்குனராக மைக் பாம்ப்பியோ இருந்து வந்தார். அவரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறி மந்திரியாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் நியமித்தார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ.வின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹேஸ்பெல்லை அதிபர் நியமித்தார். அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் ...

Read More »

வடக்கில் கடத்தலும் துப்பாக்கிச் சூட்டும்! பின்னணி என்ன?

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதோடு,துப்பாக்கிச் சூட்டினையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று ...

Read More »

ஒரு நாள் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்!- வடமாகாண முதலமைச்சர்

என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், ...

Read More »

அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதிகளின் நிலை?

அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகள், அங்கு எத்தனை நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற காலவரையறை தமது ஆட்சியில் நிர்ணயம் செய்யப்படாது என லேபர் கட்சி தலைவர் Bill Shorten கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களில் தடுத்து வைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது. மேலும் அங்கு கொண்டு செல்லக் கூடிய அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் உள்ளனர். ஆக ...

Read More »

உலக அளவில் ஆண்டுக்கு 2½ கோடி முறையற்ற கருக்கலைப்பு!

குழந்தை பிறப்பை தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் முறையற்ற கருக்கலைப்புகளில் ஈடுபடுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் பெண்களின் வாழ்க்கை நிலை, உடல் நலம் மற்றும் அவர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன்படி 1 கோடியே 80 லட்சம் தம்பதிகள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 20 லட்சம் பெண்கள் ‘எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் கிருமி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 2 லட்சத்து 66 ஆயிரம் பெண்கள் கழுத்து புற்று நோய் ...

Read More »