ஜனவரி மாதம் 20-ம் தேதி, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, மருத்துவப் பயிற்சி பெற்ற தன் உதவியாளர் ஒருவரை தொலைபேசியில் அழைத்தார். சீனாவில் ஒரு புதிய வைரஸ் அபாயகரமான முறையில் பரவியிருப்பதைப் பற்றிய செய்தியை இணையத்தில் படித்துவிட்டு, “அந்த வைரஸ் இங்கே வருமா” என்று கேட்டார். அந்த உதவியாளர், உறுதியாக இங்கேயும் வரும் மேடம் என்று பதிலளித்தார். இப்படித்தான் ஷைலஜா, கரோனாவை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைத் தொடங்கினார். நான்கு மாதங்கள் ஆன நிலையில், கோவிட்-19 வைரஸால் 524 பேர் பாதிக்கப்பட்டு நான்கு மரணங்களை மட்டுமே ...
Read More »செய்திமுரசு
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “மே 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடான கோடி தமிழர்கள் நெஞ்சில் ரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும். தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் ...
Read More »மட்டக்களப்பில் வாள்வெட்டில் ஒருவர் பலி!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15.05.2020) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். கல்லடி வேலூர் 4 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்தந பர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் ...
Read More »சுமந்திரனுக்கு கவசமானார் சம்பந்தன்!
சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு அந்த நேர்காணில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் அந்த நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் எனவும் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...
Read More »மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலியா நிறுவனம்
கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை ...
Read More »10 லட்சம் பேரை கொண்ட உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் பரவியது கொரோனா
வங்காளதேச நாட்டில் ரோஹிங்யா அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மியான்மரில் சிறுபான்மையினராக வாழ்ந்துவந்த ரோஹிங்யா இன முஸ்லிம்களின் சில குழுக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மியான்மர் ராணுவம் ஈடுபட்டனர். மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கியது முதல் உயிருக்கு அஞ்சி சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அந்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகவும் ...
Read More »சிறிலங்கா இராணுவத்தால் சூடப்பட்டவரை பார்வையிட்டார் கஜன்!
யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார் இன்று (15) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது 22) என்ற இளைஞள், கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்தார். இதனையடுத்து, குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தெரிவிக்கையில், “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ...
Read More »யாழில் சிறிலங்கா இராணுவம் துப்பாக்கிச் சூடு !
யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை (15.05.2020) ஒரு மணியளவில் இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் (வயது -22) என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி ...
Read More »கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்கத் தயார்!-இந்திய உயர்ஸ்தானிகர்
சிறிலங்கா – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்க தாம் தயார் என உயர்ஸ்தானிகர் கோபால் போக்லேயும் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தனது சான்றுகளை ; ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்து சிறிலங்காவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றிருந்தார். ...
Read More »‘மவுத் வாஷ்’ கொரோனா பரவலை குறைக்குமா? ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு
மவுத் வாஷ்’ எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவலை குறைக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவிய இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மவுத் வாஷ் ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			