செய்திமுரசு

தேவா­ல­ய தற்­கொலை குண்­டு­தாரியின் உடற்பாகங்கள் அடக்கம்!

நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்­கொலை தாக்­கு­தலை நடத்­திய தற்­கொ­லை­தா­ரி­யான  முஹம்மத் ஹஸ்­தூனின் தலை மற்றும் உடற்­பா­கங்கள் நேற்று பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் நீர்­கொ­ழும்பு மாந­கர சபைக்கு சொந்­த­மான  பொது மயா­னத்தில் அ­டக்கம் செய்­யப்­பட்­டன. இதன்­போது பிர­தேச செய­லக அதி­கா­ரிகள்,  அங்­கு­ரு­கா­ர­முல்ல கிராம சேவகர், பொலி ஸார்  ஆகியோர் உடன் இருந்­தனர். எந்­த­வித சமய அனுஷ்­டா­னங்­களும் இடம்­பெ­றாமல் தற்­கொ­லை­தா­ரியின் தலை மற்றும் உடற்­பா­கங்கள் பல­கை­யி­லான சீல்­வைக்­கப்­பட்ட பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டன. தற்­கொலை தாக்­குதல் ஏப்ரல் 21 ஆம் திகதி ...

Read More »

இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றமை ஐஎஸ் தலைமைக்கு எவ்வாறு தெரியவந்தது?

ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம்பத்தில் அந்த அமைப்பிற்கு தெரியாது என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் உள்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஐஎஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்புகொண்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள  அந்த நபர் ,மூன்றாம் தரப்பொன்றின் மூலமாக,  தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் தீவிரவாதிகளை ஐஎஸ் அங்கீகரிக்கவேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார் ...

Read More »

இந்தோனேசியாவில் பாரிய தீ விபத்து : 30க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள  தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுவதற்கான தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,சம்பத்தில் காயடைமந்த தொழிலாளர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் முதலாவது கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த தாயார்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது. அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் ...

Read More »

அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் ?

ஐ.எஸ் தாக்குதல்  சம்பவங்களுக்குப்பிறகு  இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் ...

Read More »

அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி!

மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின்  லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என  மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான  சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்துவகிசிச்சை ...

Read More »

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை மோசம் !

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை ஆபத்தாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் சோதனை நடத்திய பின்னரே வைத்தியர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.   உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சீனி குறைந்து வருவதாகவும் இந்நிலை தொடர்ந்ததால் உயிராபத்து ஏற்படலாம் எனவும் உடனடியாக வைத்தியாசாலையில் அனுமதிக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதற்கு உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை ...

Read More »

தாக்குதல்கள் குறித்த உண்மைகளை மறைக்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். பரிசுத்த பாப்பரசரைசந்திப்பதற்கு முன்னர் ரோமில் செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தனது உணர்வுகளை கண்ணீருடன் அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கணவர் ஒருவர் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் இழந்துள்ளார், நான் அவரை சந்திக்கசென்றவேளை தான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் பிள்ளைகள் ஓடிவருவதை அவர் நினைவுகூர்ந்தார் இன்று அந்த வீடு வெறுமையாக உள்ளது என மல்கம் ...

Read More »

விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை சட்டம் அமலுக்கு வந்தது!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் ...

Read More »

கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்! – துருக்கி அதிபர்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் திகதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது. இதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், ...

Read More »