தேவா­ல­ய தற்­கொலை குண்­டு­தாரியின் உடற்பாகங்கள் அடக்கம்!

நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்­கொலை தாக்­கு­தலை நடத்­திய தற்­கொ­லை­தா­ரி­யான  முஹம்மத் ஹஸ்­தூனின் தலை மற்றும் உடற்­பா­கங்கள் நேற்று பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் நீர்­கொ­ழும்பு மாந­கர சபைக்கு சொந்­த­மான  பொது மயா­னத்தில் அ­டக்கம் செய்­யப்­பட்­டன.

இதன்­போது பிர­தேச செய­லக அதி­கா­ரிகள்,  அங்­கு­ரு­கா­ர­முல்ல கிராம சேவகர், பொலி ஸார்  ஆகியோர் உடன் இருந்­தனர். எந்­த­வித சமய அனுஷ்­டா­னங்­களும் இடம்­பெ­றாமல் தற்­கொ­லை­தா­ரியின் தலை மற்றும் உடற்­பா­கங்கள் பல­கை­யி­லான சீல்­வைக்­கப்­பட்ட பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டன.

தற்­கொலை தாக்­குதல் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்­தப்­பட்ட நிலையில் சரி­யாக இரண்டு மாதங்களின் பின்னர்  நேற்று 21 ஆம் திகதி புதைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­ப்பிட்­டிய தேவா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் 110 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.