செய்திமுரசு

குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது – பெனாசிர் மகன்

இந்தியாவின் குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய ...

Read More »

வாழ்வை வென்ற நிமால்!

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப்  பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசியைச் சுவைத்துக் ...

Read More »

ஜெனீவாவில் தமிழர்கள்!

ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது? கடந்த எட்டு ஆண்டுகளாக என்ன கிடைத்ததோ அதன் தொடர்ச்சிதான் இம்முறையும் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் வைகுந்தவாசனில் தொடக்கி கஜேந்திரகுமார் வரையிலுமான பல தசாப்த கால அரசியலில் ஐ.நா. அல்லது ஜெனிவா எனப்படுவது ஒரு மாயையா? அல்லது விடியுமாமளவும் விளக்கனைய மாயையா ? இக்கேள்விக்கு விடை காண்பதென்றால் அதை மூன்று ...

Read More »

அவுஸ்ரேலிய முப்படைகள் கப்பல்கள் சிறிலங்காவில்!

அவுஸ்ரேலியாவின் முப்படைகள் , கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இலங்கை சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அவுஸ்ரேலிய முப்படைகள் சிறிலங்கா சென்றுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் சிறிலங்கா முப்படைகள் ஒன்றிணைந்து அனர்த்த முகாமைத்துவம். கடற்பிராந்திய தந்திரோபாயம் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். கன்பரா மற்றும் எச்.எம்.ஏ.எஸ். நியூகேஸ்லி ஆகிய கப்பல்கள் நேற்றைய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த பாதிரியார்……!

  அவுஸ்திரேலியாவில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சில வாரங்களில் பாதிரியார் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மேற்கு அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் ஜோசப் ட்ரான் (49). இவர் பெர்த் நகரத்தில் உள்ள பல பள்ளிகளில் பணிபுரிந்திருக்கிறார். அர்மாடாலின் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்தவர் சமீபத்தில் தான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 13 வயதடைந்திருக்கும் ஒரு சிறுமியை பல வருடங்கள் அவர் பாலியல் ...

Read More »

இலங்கை கடற்பரப்பில் வைத்து 9 ஈரானியர்கள் கைது!

மீன்பிடிப் படகொன்றில் போதைப் பொருட்களுடன் பயணித்த 9 ஈரான் நாட்டவர்கள் இன்று காலை இலங்கையின் தென் கடற் பிரதேசத்தில் வைத்து, 100 கிலோ கிராமுக்கு அதிகமானப் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென,    காவல் துறை விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட ​பிரதி காவல் துறை மா அதிபர் எம்.ஆர் லத்தீப் தெரிவித்துள்ளார். காவல் துறை  விசேடப் படையணினியின் இந்த நடவடிக்கைக்கு, கடற்படையினரிதும் ஒத்துழைப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்ட போது கப்பலிலிருந்து   50 கிலோகிராமுக்கும் அதிகமாக  போதைப் பொருள் ...

Read More »

ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியல் – இந்துஜா குடும்பத்துக்கு முதலிடம்!

25.2 கோடி பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் பிரிட்டனில் வாழும் ஆசியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்துஜா குடும்பம் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டன் நகரில் நடைபெற்ற ‘ஏசியன் பிசினஸ் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியில் பிரிட்டனில் வாழும் ஆசியா கண்டத்தின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை பிரிட்டன் நாட்டுக்கான இந்தியாவின் உயர் தூதர் ருச்சி கனஷியாம் வெளியிட்டார். 7 புதிய வரவுகள் உள்பட 101 பெரும் செல்வந்தர்களின் பெயர்களை கொண்ட இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட சுமார் 300 கோடி பவுண்டுகள் அதிக ...

Read More »

வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை!

பல்வேறு மின்சார உற்பத்தி நிலையங்களில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பமான வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை ஏற்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், குறித்த நிலையானது எதிர்வரும் சில நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மின்சார உறபத்தி நிலையங்களின் செயழிலப்பு மற்றும் வெப்பமான வானிலை என்பனவற்றின் காரணமாக, மின்சார விநியோகத்திற்கு கேள்வி 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறித்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் ...

Read More »

புதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா?

ஜெனி­வாவில் அமைந்­துள்ள  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட  ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. ஏற்­க­னவே இலங்கை  அர­சாங்கம்   தீர்­மானம் எடுத்­துள்­ளதன் பிர­காரம் பிரே­ர­ணைக்கு அனு­ச­ரணை வழங்கும் பட்­சத்தில் இலங்கை தொடர்­பான 40/1 என்ற இந்தப் புதிய பிரே­ரணை வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்­றப்­படும். ஒரு­வேளை ஏதா­வது  ஒரு உறுப்­பு­நாடு  எதிர்ப்பு தெரி­வித்தால்  பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை மனித உரிமை  பேர­வைக்கு ஏற்­படும். அவ்­வாறு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டா­விடின்  ஐ.நா. மனி­த ­உ­ரிமை ...

Read More »

யுத்தத்தின் போது அக்கறை காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தலையீடு செய்வது ஏன்?

நாட்டில் மூன்று தசாப்தகாலமாக யுத்தம் நிலவிய போது எவ்வித அக்கறையும் காட்டாத மனித உரிமை அமைப்புக்கள் தற்போது யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுவ் மக்கள் சுமுகமானதொரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்ற போது தேவையின்றி ஏன் தலையீடு செய்கின்றன,இது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு என்றே கருதவேண்டியுள்ளது. எனவே அரசாங்கத்திற்கு முதுகெலும்பு உண்டெனின் ஸ்திரமான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள்சபை மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். ...

Read More »