வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை!

பல்வேறு மின்சார உற்பத்தி நிலையங்களில் திடீரென ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பமான வானிலை காரணமாக மின்சார விநியோகத் தடை ஏற்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த நிலையானது எதிர்வரும் சில நாட்களுக்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார உறபத்தி நிலையங்களின் செயழிலப்பு மற்றும் வெப்பமான வானிலை என்பனவற்றின் காரணமாக, மின்சார விநியோகத்திற்கு கேள்வி 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன், இதுபோன்ற நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதிருப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.