செய்திமுரசு

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை!- ஜேவிபி முயற்சி

அரசமைப்பை திட்டமிட்டு மீறியதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பிற்கு முரணான விதத்தில் செயற்பட்டார் என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடிப்படையாகவைத்தே அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரி தொடர்ந்தும் அரசமைப்பை மீறினால் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் என தெரிவித்துள்ள விஜிதஹேரத்  ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவரமுடியும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசமைப்பு சதியில் ஈடுபட்ட ...

Read More »

மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும்!

மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி  செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சிறிலங்கா  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ...

Read More »

தமிழை வளர்ப்பது எந்தளவு முக்கியமோ தமிழை பரப்புவதும் அந்தளவு முக்கியம்தான்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர பரீட்சைக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95புள்ளிகளை செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் அவர்களுடனான செவ்வி கேள்வி: பரீட்சை திணைக்களம் (NESA) உங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது? பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. கேள்வி: இந்த பரீட்சை பெறுபேறை எதிர்பார்த்தீர்களா? பதில்: ...

Read More »

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி தவறானது!

சிறிலங்கா ஜனாதிபதியினால்நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியானால் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நான்கரை வருடங்கள் ஆவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் அவ்வாறு கலைக்க வேண்டுமானால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அப்போது பிரதமாராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். அதிலிருந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ...

Read More »

கங்காரு நாட்டில் சாதனை படைத் ஈழத்து மாணவன்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து, மாநிலத்தில் முதலாவதாக, செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் வந்திருக்கின்றார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன் – பத்மினி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனான ஹரிஷ்ணா, அவுஸ்திரேலியாவில் பிறந்து ஆரம்பக் கல்வி முதல் வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழியைக் கற்றார். கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள இம்மாணவனின் பெறுபேறுகள், இன்று (12) வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களம், தொலைபேசியூடாகப் பெறுபேற்றை கடந்த வெள்ளிக்கிழமை (7) அறிவித்தபொழுது அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, ...

Read More »

அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?

2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது.   பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார். தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்து நீக்கிவிட்டது. தூதுவர்களை ...

Read More »

தமிழ் மக்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் ஓரங்கட்டுகிறது!

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது மக்களுடன் எவ்வாறு சேவையாற்ற வேண்டும் என்பதனை எடுத்துக் காட்டக் கூடிய ஒரு கண்காட்சி நிகழ்வும் இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை தூண்டக் கூடிய ...

Read More »

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில் இரும்பு கம்யினால்  கட்டப்பட்ட நிலையில் மனித எச்சம் ஒன்று கிடைக்கப்பெற்றது. மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு  அடிமைகளாக கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளதாக முன்னாள் வடமாகாண மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து அவர் நேற்று  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.   இது குறித்து மேலும் ...

Read More »

பிரெக்சிட் விவகாரம்!-வெற்றி பெற்றார் தெரசா மே!

பிரெக்சிட் விவகாரம் பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ள நிலையில், சக எம்பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் நாடாளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், ...

Read More »

ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது!

ஆஸ்திரேலியவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை, 2017 மற்றும் 2018க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கைப்படி, 2017-18 நிதியாண்டில் 9,315 சீனர்கள் பாதுகாப்பு விசா (Offshore Protection Visa) கோரி விண்ணப்பித்துள்ளனர்.  இதுவே, கடந்தாண்டு 2,269 சீனர்கள் மட்டுமே பாதுகாப்பு விசா கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இந்த அடிப்படையில், தஞ்சம் கோரி விண்ணப்பித்த சீனர்களின் எண்ணிக்கை 311 சதவீதம் அதிகரித்துள்ளது.  திடீர் அதிகரிப்பு ஏன்? ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் மற்றும் சுற்றுலா விசாவில் வரக்கூடிய பல சீனர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிப்பது இந்த திடீர் ...

Read More »