செய்திமுரசு

லண்டனில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர்; வியட்நாமைச் சேர்ந்தவர்கள்!

லண்டனில் லாரி ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேர் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதனை வியட்நாமைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் ...

Read More »

தமிழ் மக்கள் சார்பில் கூட்டமைப்பானது சரியான முடிவினை நிச்சயமாக அறிவிக்கும்!

எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான கால அவகாசத்தினை வழங்கும் வகையில் எமது முடிவினை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அதற்கான தபால் மூலமான வாக்களிப்பு 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய முடிவினை அறிவிக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோதே சம்பந்தன் மேற்கண்டவாறு ...

Read More »

செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்!

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வதும் வேட்­பா­ளர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இந்தத் தேர்­தலில் எந்த வேட்­பாளர் வெற்­றி­பெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். இத்­தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ உள்­ளிட்ட ஏனைய சில வேட்­பா­ளர்­க­ளுக்கும் சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ரவு வழங்கி வரு­கின்­றன. மலை­யகக் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி சஜித் பிரே­ம­தா­ச­விற்கும், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கோத்­த­பா­ய­விற்கும் பூரண ஆத­ர­வினை தெரி­வித்­துள்­ளன என்­பதும் ...

Read More »

நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துங்கள்..!

தாம் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான கொள்கையை வெளிப்படுத்தவேண்டும். வேட்பாளர்கள் ஒளிவு மறைவு இன்றி தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டியது அவசியமாகும். நாட்டில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படவேண்டும் என்பதனை முதலில் பிரதான வேட்பாளர்கள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் அதற்கான தீர்வுத்திட்ட அணுகுமுறையை தெளிவாக வெளியிடவேண்டும். ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றன. நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகளினதும்   வேட்பாளர்களினதும்   சூறாவளிப் ...

Read More »

அர­சாங்கம் படு­கொ­லையைச் செய்­ததாக கூறிய கோத்தா!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை விவ­கா­ரத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தையும், நாட்­டையும் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா நீதி­மன்­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ காட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கிறார் என்று தெரி­வித்த சுகா­தார மற் றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, இவ்­வி­வ­கா­ரத்தின் உண்மை நிலையைப் புரிந்­து­கொள்­ளா மல் சில ஊட­கங்கள் தவ­றாகச் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன என்றும் சுட்­டிக்­காட்­டினார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது: ஊட­க­வி­ய­லாளர் லசந்த ...

Read More »

தமிழர்களுக்கான தீர்வை பகிரங்கமாக சொல்ல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அச்சம்!

தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதனை விட இதனை சொன்னால் தங்கள் பகிரங்கமாக தேர்தலில் தாக்கப்படுவோம் தங்களுக்கு எதிராக அமைந்துவிடும் என்ற பயத்தில் எல்லா வேட்ப்பாளர்களும் ஒளித்து விளையாடும் நிலைமையே காணப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.   யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுஜன பெரமுனாவின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனை ...

Read More »

பில்கேட்ஸுக்கு வந்த சோதனை!

உலக பணக்கார்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் நீடித்த பில்கேட்ஸ் 24 மணி நேரத்தில் நிலைதடுமாறிப் போனதை அறிந்து கொள்வோமா? அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு  முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்க கணினிசார் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  நிறுவனர் பில்கேட்ஸ் 1.25 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் முறையாக அந்த பட்டியலில் இடம் பிடித்தார். அதை தொடர்ந்து கடந்த 1994ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 24 ...

Read More »

தீபாவளி பண்டிகைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்து!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அனைவருக்கும் வணக்கம் என்பதை இந்தி மொழியில் கூறி தனது வாழ்த்தினை தொடங்கும் ஸ்காட் மாரிசன் தீப ஒளி திருநாளை, தாம் எப்போதும் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொருவரோடும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பையும், நம்பிக்கையையும் ...

Read More »

யுத்த வெற்றிக்காக உரிமை கோரும் வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்  யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.  இது தீவிரமடையும் பட்சத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகத்தன்மை  இல்லாது போய் விடும் என்பதால் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது. எனினும்  இதை மகிந்த அணியினர் விடுவதாக இல்லை. எந்த தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ...

Read More »

கொழும்பில் கைதான 52 மாணவர்களுக்கும் பிணை!

கொழும்பில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட 52 மாணவர்களையும் பிணையில் செல்ல கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குறித்த மாணவர்கள் 52 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்ததுடன், கைதான மேலும் ஒரு மாணவனை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

Read More »