அர­சாங்கம் படு­கொ­லையைச் செய்­ததாக கூறிய கோத்தா!

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை விவ­கா­ரத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­தையும், நாட்­டையும் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா நீதி­மன்­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ காட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கிறார் என்று தெரி­வித்த சுகா­தார மற் றும் சுதேச வைத்­திய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, இவ்­வி­வ­கா­ரத்தின் உண்மை நிலையைப் புரிந்­து­கொள்­ளா மல் சில ஊட­கங்கள் தவ­றாகச் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் மகள் அஹிம்சா விக்­கி­ர­ம­துங்­க­வினால் அமெ­ரிக்­காவின் கலி­போர்­னிய நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு தொடர்பில் அந்­நீ­தி­மன்­றினால் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற தீர்ப்பு தற்­போது சர்­வ­தேச ரீதியில் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக மாறி­யி­ருக்­கின்­றது. ஆனால் அவ்­வ­ழக்கு தொடர்பில் நீதி­மன்­றினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு தொடர்­பான சரி­யான தெளி­வின்றி சில ஊட­கங்கள் அஹிம்சா விக்­கி­ர­ம­துங்­கவின் வழக்கை அமெ­ரிக்க நீதி­மன்றம் தூக்கி வீசி­விட்­டது என்று செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன.

தனது தந்தை கொல்­லப்­பட்­டமை தொடர்பில் நீதி கோரு­கின்ற உரிமை அவ­ரு­டைய மக­ளுக்கு உண்டு. அவ்­வா­றி­ருக்க அந்த வழக்­கி­லி­ருந்து தப்­பித்துக் கொள்­வ­தற்­காக கோத்­த­பாய ராஜ­பக்ஷ நாட்­டையும், இரா­ணு­வத்­தையும் மிக மோச­மாகக் காட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கிறார். ‘சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் படு­கொ­லை­யா­னது அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தொன்­றாகும். நான் அந்த அர­சாங்­கத்தின் ஒரு அதி­காரி மாத்­தி­ரமே. எனவே இப்­ப­டு­கொலை தொடர்­பான பொறுப்பை நான் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது’ என்று கலி­போர்­னிய நீதி­மன்­றத்தில் சட்­டத்­த­ர­ணிகள் ஊடாக கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். ஆக­வேதான் இவ்­வ­ழக்கு தள்­ளு­படி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது. அதனால் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிர­ப­ராதி என்று முடி­வா­காது.

ஆனால் அதே­வேளை அமெ­ரிக்க நீதி­மன்­றத்தில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருப்­பதன் ஊடாக, இலங்கை வர­லாற்­றி­லேயே அரச அதி­கா­ரி­யாக இருந்த ஒருவர் அர­சாங்கம் படு­கொ­லையைச் செய்­த­தாகக் குறிப்­பிடும் முத­லா­வது சந்­தர்ப்­பத்தை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கிறார். கடந்த காலத்தில் எமது அர­சாங்கம் தருஸ்மன் அறிக்­கையை முற்­றாக நிரா­க­ரித்­தி­ருந்­தது. நாட்டில் இடம்­பெற்ற போரின் விளை­வாக சிலர் கொல்­லப்­பட்­டி­ருந்­தாலும், குறிப்­பாக இலக்கு வைக்­கப்­பட்டு எவரும் திட்­ட­மிட்டுக் கொல்­லப்­ப­ட­வில்லை என்றே நாம் கூறி­வந்­தி­ருக்­கின்றோம். எனினும் தற்­போது  லசந்­தவை அர­சாங்­கமே கொலை செய்­தது என்ற கோத்­த­பா­யவின் வாக்­கு­மூலம் சர்­வ­தே­சத்தின் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­களைக் கிளப்­பப்­போ­கின்­றது.

சிவ­ரா­மையும் அர­சாங்­கமா கொன்­றது? பிரகீத் எக்­னெ­லி­கொ­டவை அர­சாங்­கமா காணா­ம­லாக்­கி­யது? வசீம் தாஜு­தீனை கொன்­றது அர­சாங்­கமா? உள்­ளிட்ட பல்­வேறு கேள்­விகள் எழும் அதே­வேளை, அர­சாங்­கமே அவற்றைச் செய்­தது என்று சர்­வ­தேசம் முடி­வு­செய்­து­விடும்.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ இரு­த­ட­வைகள் நாட்டை படு­மோ­ச­மாகக் கைவிட்­டி­ருக்­கிறார். முத­லா­வ­தாக நாட்டில் யுத்தம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த கால­கட்­ட­மான 1991 ஆம் ஆண்டில் தானும், தனது மனை­வியும் மிகுந்த மன­வ­ழுத்­தத்­திற்கு உட்­பட்­டி­ருப்­ப­தாக மருத்­துவ அறிக்­கை­யொன்றைக் காண்­பித்து, இரா­ணு­வத்­தி­லி­ருந்து விலகி நாட்டைக் கைவிட்டு அமெ­ரிக்­கா­விற்குச் சென்றார். இரண்­டா­வ­தாக தற்­போது அமெ­ரிக்­காவின் கலி­போர்­னிய நீதி­மன்­றத்தில் அர­சாங்­கத்­தையும், இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கின்றார். 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்­சிக்கு வந்தால் அவர்­களை மின்­சாரக் கதி­ரையில் ஏற்­றி­வி­டுவோம் என்று ஏன்­பி­ர­சாரம் செய்­தார்கள். ஆனால் தற்­போது தனது சகோ­த­ர­னான மஹிந்த ராஜ­ப­க்ஷவை மின்­சாரக் கதி­ரைக்குக் கொண்­டு­செல்­வ­தற்கு கோத்­த­பாய வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் மீது தானே குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது என்று நாங்கள் அமை­தி­யாக இருக்­காமல், அப்­போது படு­கொ­லைகள் இடம்­பெ­ற­வில்லை என்றே கூறி­வந்தோம். ஆனால் கோத்­த­பா­யவின் சட்­டத்­த­ர­ணி­களால் எழுத்­து­மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் ஆவ­ணங்கள் மிகவும் பார­தூ­ர­மா­னவை. அதன்­மூலம் நாட்டை சர்­வ­தேச மனித உரிமை நீதி­மன்­றத்­திற்கு அழைத்­துச்­செல்­வ­தற்கு வாய்ப்­பேற்­ப­டுத்தி இருக்­கின்­றார்கள்.

மேலும் தேர்தல் பிர­சா­ரங்­களைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ வேறு யாரோ எழு­திக்­கொ­டுப்­ப­வற்­றையே பார்த்து வாசிக்­கின்றார். அதிலும் அண்­மையில் பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றில் எழுதிக் கொடுத்­ததைக் கூட சரி­யாக வாசிக்க முடி­யாமல் தடு­மா­றினார். இவர் ஒரு­வேளை தேர்­தலில் வெற்­றி­பெற்று ஜனா­தி­ப­தி­யானால், அதன் பின்னரும் மஹிந்த ராஜபக்ஷவை தன்னுடனேயே வைத்துக்கொள்வாரா என்று எமக்கு சந்தேகம் எழுகின்றது.

ஆனால் அதனூடாக ஜனாதிபதி பிரதமரிடம் ஆலோசனை பெற்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உயர்மட்டத்தில் அமுலாக வாய்ப்பிருக்கின்றது. அதேபோன்று எமது வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தொலைக்காட்சி  நேரடி விவாதமொன்றிற்கு கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் கோத்தபாயவோ அல்லது மஹிந்த தரப்போ விவாதத்திற்கு வரமாட்டார்கள். ஏனெனில் ஏற்கனவே எழுதியிருப்பதை பார்த்து வாசிப்பதற்கு மாத்திரமே அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார்.