செய்திமுரசு

வக்சினைப் போடுங்கள் ஆனால் கடவுளை நம்புங்கள்?

பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெருந்தொற்று நோய்க் காலத்தில் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பது என்பது சோதனை மிகுந்தது. அந்தச் சோதனையில் அவர் சித்திபெறவில்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் சொதப்பி விட்டார். மந்திரித்த நீரை ஆறுகளில் கலப்பதிலிருந்து தொடக்கி உள்ளூர் வெதமாத்தையாவான தம்மிகாவின் கொரோனாப் பாணியை அங்கீகரித்து அருந்தியதுவரை அவர் மாந்திரீகம் மருந்து எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு குழப்பிவிட்டார். இப்போது அவருடைய இடத்துக்கு ஹெகலிய ரம்புக்வெல வந்திருக்கிறார். இவர் யுத்தகாலங்களில் பாதுகாப்புத்துறை பேச்சாளராக இருந்தவர். அந்நாட்களில் இவர் எப்படி உண்மைகளை ...

Read More »

ஆப்கானிஸ்தானை பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை காக்க வேண்டியது எங்களின் கடமை என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது. இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ...

Read More »

சமூக சேவகருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி.யின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் இந்த அழைப்பினை எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் குறித்து சி.ஐ.டி சிறப்பு விசாரணையைத் தொடங்கியதால், உண்மையை விசாரிக்க இளைஞர் சி.ஐ.டி.க்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறித்த நபர் காலி, ...

Read More »

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார்

ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளையின் தலைவருமான கே.வி. தவராசாவின் துணைவியாரான, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா காலமானார். திடீர் சுகயீனமடைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். நாட்டின் முக்கியமான வழக்குகளிலும், சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் ஆஜரானவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், சமூகப் பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவும் நீதி வேண்டி, அயராது பாடுபட்டவர். சட்டத்துறையில் பல நுணுக்கங்களை திறம்பட வெளிப்படுத்திய சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பாரிய இழப்பாகும்.

Read More »

தன்னைத் தானே எரியூற்றிக்கொண்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்

மெல்பன் நகரின் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே எரியூற்றியதில் மரணமடைந்துள்ளார். கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவருக்கு வயது 38.  ஒரு துப்புரவு தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார். திருகோணமலையைச் சேர்ந்த கோனேஸ்வரன் கிருஷ்ணபிள்ளை என்பவரின் குடும்பம் இராணுவத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது. இவர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து ...

Read More »

காலத்தாண்டுதலை நிகழ்த்திய நகுலன்

சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்து கவிதை (1959) எழுதினாலும் நாவல், சிறுகதை பெற்ற கவனத்தை நகுலனின் கவிதை பெறுவதற்குச் சிறிது காலம் பிடித்தது. இது தனிக்கவிதைகள் மூலமாக அல்லாமல், நீண்ட கவிதைகள் மூலமாகவே சாத்தியமாயிற்று. தனிக்கவிதைகளைத் தொடக்கக் காலத்திலும், தனது இறுதிக் காலத்திலும் எழுதியிருக்கிறார். ‘சிலை’ (1959) கவிதையில் சடங்கு வழிப்பட்ட மத நம்பிக்கைகளை, ‘சிலை முன் பல பேசி என்ன பயன்?’ என்று கேள்விக்கு உட்படுத்துகிறார். அதே கவிதையில், ‘சாவுக்கும் அர்த்தமுண்டு/ சம்போகத்தில் நாசமுண்டு’ எனச் சொல்வதன் மூலமாகப் புலன்வழி வாழ்க்கையின் எல்லைகளைச் ...

Read More »

ஸ்டீவ் ஸ்மித் போல் உருவ ஒற்றுமை கொண்ட அமெரிக்க படைவீரர்

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகள் தங்களின் தூதர்கள், குடிமக்களை வெளியேற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரின் படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். அந்தப் படத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முக சாயலுடன் ஒத்துப்போவதைக் கண்டனர். இதையடுத்து, அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும் பலர் தங்களுக்கு பிடித்த ...

Read More »

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் 10 பேர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டiதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன். இன்று திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்;கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும்;, களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read More »

தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் மெய்நிகர் சந்திப்பு

தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை 22- 08- 2021 காலை 11.00 மணியளவில் மெய்நிகர் இணைய வழியின் ஊடாக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் மாவை சேனாதிராஜா, சீ. வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,கோவிந்தன் கருணாகரம், என்.ஸ்ரீகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்றக் கூடிய விடயங்கள், எதிர்வரும் ஐநா மனித உரிமை ...

Read More »

நவீனமயமாக்கத்தில் புதிய பயணத்தை தொடங்கியிருக்கும் திபெத்

## சீனாவின் திபெத் சுயாட்சி பிராந்தியம் அதன் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான சமாதானரீதியான விடுதலையின் 70 வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், அபிவிருத்தியில் துள்ளிப்பாய்ந்த பல தசாப்தங்களுக்கு பிறகு புதிய நவீனமயமாக்கத்தை தொடங்குகிறது ; ## ஒரு சில தசாப்தங்களில், முனனென்றும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைச் செய்வதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி திபெத்தில் உள்ள சகல இனக்குழுமங்களையும் ஐக்கியப்படுத்தி தலைமைதாங்கியிருக்கிறது ; ## ஐக்கியப்பட்ட, சுபிட்சம் நிறைந்ந, கலாசார ரீதியில் மேம்பட்ட, ஒத்திசைவுடைய, அழகான புதிய நவீன சோசலிச திபெத்தை கட்டியெழுப்புவதற்கு ...

Read More »